RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

06 August 2012

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.



இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன் ... 

"அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை 'ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். 
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு 'என்று 100 - ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். 

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் 'ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா 'என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி .... 

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். 'அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் 'என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். 

என்னவென்று கேட்கிறார். 'இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா 'என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று 'முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம் 'என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள். 

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து 
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. 'எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா "என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் 'ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு' தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை .... 

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3 - பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் 
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி 'ஐயா நீங்களும் வாங்க' என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது. 

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா ... என்கிறார். ஆமாங்க ஐயா. நான் 
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா ... வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். 

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு 'நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே ... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. 
சமைக்கலயாமே .... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க ... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் .. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன் .. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. 'இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்' னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது 
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை ... 

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து 'இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க 'ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி 'போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்'என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். 
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார். 
ஒரு ஏழையின் கண்ணீர் வலி .. இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார் .... 
நன்றி-Prabaharan Arunachalam

02 August 2012

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 22 ம் ஆண்டுகள் நினைவு தினம்.

"நான் சாகத் தயாராக இருக்கிறேன், ஆனால் நான் கொல்வதற்கு தயாராகவிருப்பதற்கான காரணம்தான் இல்லை"(I am prepared to die, but there is no cause for which I am prepared to kill"-Mahatma Gandhi)

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி மட்டக்களப்பில் உள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுஸைய்னியா பள்ளிவாசல் ஆகியவற்றில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140 க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்
இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந் நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுகதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.
ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடியில் பல் வேறு வைபவங்கள் நடைபெறவுள்ளன.காலை 9 மணிக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாயலில் குர் ஆண் ஓதும் நிகழ்வும் அத்தோடு ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஷுஹதாக்கள் குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதையடுத்து நாளை பிற்பகல் அஸர் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் குர் ஆண் ஓதும் நிகழ்வும் அத்தோடு துஆ பிராத்தனை மற்றும் விஷேட உரையும் இப்தார் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

07 July 2012

சிறுபான்மையினரின் மறுவாழ்வுக்கு நிதி


இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட, சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது: 
  
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தோர், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வதற்காகவும், சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெறுவதற்காகவும் நிதியுதவியாக அதிகபட்சம் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது. 
  
இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில், ஊனமுற்றிருந்தால் அல்லது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங் குற்றங்களாகக் கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதல் முறையாக சிறு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து மீண்டவராகவும் இருக்க வேண்டும். 
  
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தால், மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து, சான்றை அளிக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், வட்டாட்சியரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று பெற்று அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
  
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 
நன்றி தினமணி 

23 June 2012

தமிழனை ஏமாளியாக்கும் புதுதிட்டம்! காஸ் லைன் பதிப்பு திட்டம்.


நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (கெயில்) காஸ் லைன் பதிப்பு திட்டம்.

கேரளா - கொச்சியில் இருந்து கர்நாடக - பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன் & வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி / அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா??

ஏழு மாவட்ட (!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம், வீடு, ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! அது மட்டும் அல்ல விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா?

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு ..!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310 கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். (தமிழகம் வழியாக வந்தால் 470 கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 310 கிமீ) அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

மலையாளிகள் அவர்களது நிலத்தில் விட மாட்டார்கள். அதனால்தான் சுற்றி தமிழ் நாடு வழியாக கொண்டு போகின்றார்கள். தமிழ் நாட்டில் மட்டும் இத் திட்டத்தால் முப்பதாயிரம் ஏக்கர்கள் விவசாய நிலம் நேரடியாக பாதிக்கப்படும். அனைவரும் இதை எதிர்த்து போராட வேண்டும். இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் இப்படியாய் விட்டால் உழவனின் நிலைமை இன்னும் மோசம் ஆகும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். கோவையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் முதன் முதலாக எதிர்ப்பு குரல் கொடுக்கப்பட்டது ... அகவே தமிழக முதல்வர் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் ஏழு மாவட்டத்தின் ஆட்சியர்களை தொடர்புகொண்டு பேசியுள்ளார், மிகவிரைவில் ஓர் தீர்வினை எதிர்பார்க்கலாம் ..
இதில் கொடுமைஎன்னஎன்றாள் இந்த காஸ் லைன் போவது பெங்கலூருவுக்குதான் ... தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கும் எரிவாயு சப்ளை இதுவரை அறிவிக்கபடவே இல்லை ... அப்படியே தமிழ்நாட்டுக்கு பிற்காலத்தில் சப்ளை இருந்தாலும், இந்த பைப்பை நெடுஞ்சாலைகள் ஓரத்திலோ, ரயில் தட ஓரத்திலோ பதிக்கலாம். அதற்கும் உடன்பட மறுக்கிறார்கள். (தமிழர் என்ற இளக்காரமா) அப்படி கொண்டு சென்றால் யாரும் ஏதும் சொல்லபோவதில்லை. இந்த போராட்டதிற்கு இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

11 June 2012

தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள் !

ஆசிய நண்பன்: தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்!

சென்னை:தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன....இரண்டு சம்பவங்களின் பின்னணிக் குறித்து போலீசாரும் துருவிதுருவி விசாரணை நடத்தப் போவதில்லை. ஊடகங்களும் இதன் பின்னணி குறித்து தோண்டி துருவப்போவதில்லை. ஆனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்வதிலேயே இவர்கள் குறியாக இருப்பார்கள். முஸ்லிம் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இதுக்குறித்து என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள்?

02 June 2012

பெரியாறு அணையின் துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

தேனி: பெரியாறு அணையில், சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு ஏற்படுத்திய துளைகளை அடைக்க, தமிழக அரசு பயன்படுத்தும் தொழில் நுட்பம், கேரள அதிகாரிகளை வியப்படையச் செய்துள்ளது மற்றும் அங்கே இருக்கும் அரசியல் வாதிகளை வயிற்றெரிச்சலும் அடைய செய்து உள்ளது.பெரியாறு அணையில் ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு, 9 இடங்களில் துளைகளை போட்டது. ஒவ்வொன்றும், 140 முதல் 180 அடி ஆழத்தில் போடப்பட்டன. துளைகளை அடைக்க, முதலில் அனுமதி மறுத்த கேரளா, தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு அதில் இருந்த எச்சரிக்கைக்குகம் பின் ரொம்ப மரியாதையுடன் துளைகளை அடைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. தற்போது, திரு. சம்பத்குமார் தலைமையிலான அர்ப்பணிப்பு உணர்வு மிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் மேற்பார்வையில், துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிவடைய, இன்னும் 15 நாட்களுக்கு மேல் ஆகும். ஒவ்வொரு துளையும், ஒரு நாளைக்கு 10 அடி ஆழம் வரை அடைக்கப்படுகிறது. உயர் தொழில் நுட்பத்தில், சிமென்ட், கான்கிரீட் கலக்கப்பட்டு, கலவையை கம்ப்ரஷரில், அதிக வேகத்தில் துளைக்குள் செலுத்தி அடைக்கின்றனர்.இவ்வாறு, உயர் தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அடிப்பகுதியில் உள்ள துளைகள் மட்டுமின்றி, பக்கவாட்டிலும் உள்ள சிறு துளைகளும், அடைபட்டு விடுகின்றன. இத்தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அணை முன்பை விட வலுவாகிவிடும். இதை கண்காணித்து வரும் கேரள அதிகாரிகள், தமிழக தொழில் நுட்ப மேம்பாடு குறித்து, வியப்பு தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், இது குறித்து எந்த புகாரும் சொல்ல முடியாது. தற்போது பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை, யாரும் குறை சொல்லவே முடியாது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெரியாறு அணையில் தமிழக வழக்கறிஞர்கள்: வழக்கு விசாரணைக்காக முல்லைப்பெரியாறு அணையை, தமிழக வழக்கறிஞர்கள் குழு பார்வையிட்டது.சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில், ஐவர் குழு ஆய்வுப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கான அறிக்கைகளை இக்குழு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டது. அறிக்கை நகல்கள் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தற்போது சுப்ரீம் கோர்டில், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சில தினங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு தேவையான தகவல்களை சேகரிக்க சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நவநீத கிருஷ்ணன், உமாபதி ஆகியோர் கொண்ட குழு நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றது. மெயின் அணை, பேபி அணை, ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்கும் பணிகளை பார்வையிட்டனர். மேலும், தற்போது வரை உள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், மதுரை தலைமை பொறியாளர் சம்பத்குமார், பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜகோபால், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் உடன் இருந்தனர்..

01 June 2012

கும்பகோணத்தில் முகமூடி கொள்ளை.


கும்பகோணம் டாக்டர் ராமமூர்த்தி ரோடு 2 - வது தெரு செல்லம் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதாம்பிகை. இவர் டாக்டருக்கு படித்துள்ளார். ஆனால் குடும்பத் தலைவியாக உள்ளார். நேற்று இரவு செந்தில் குமாரும் அவரது மனைவி லலிதாம்பிகையும் வீட்டில் ஏ.சி. அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் டாக்டர் செந்தில் குமாருக்கு கும்பகோணம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து போன் வந்தது. நோயாளி ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள் என போனில் பேசியவர்கள் தகவல் தெரிவித்தனர். செந்தில் குமாரும் தனது மனைவியிடம் தெரிவித்து விட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர். டாக்டர் செந்தில் குமார் வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து அக் கும்பல் உள்ளே நுழைந்தது. பெண் டாக்டர் லலிதாம்பிகை ஏ.சி. அறையில் படுத்து இருந்ததால் கொள்ளையர்கள் வெளிப்புற கதவை உடைக்கும் சத்தம் கேட்கவில்லை. உள்ளே புகுந்த அக்கும்பல் லலிதாம்பிகை படுத்திருந்த அறையின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்தது. திடீரென முகமூடி கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்தததை பார்த்ததும் டாக்டர் லலிதாம்பிகை அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட முயன்றார். அவரை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கத்தி முனையில் மிரட்டினர். சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றனர். இதனால் லலிதாம்பிகை பயந்து போனார். உடனே கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் பணம், நகை எங்கு இருக்கிறது என மிரட்டி கேட்டனர். பீரோவில் ரூ. 3 லட்சம் பணம் இருப்பதாக லலிதாம்பிகை தெரிவித்தார். உடனே கொள்ளைக் கும்பல் அந்த பணத்தை எடுத்துக் கொண்டது. மேலும் கத்தி முனையில் லலிதாம்பிகை அணிந்திருந்த 5 பவுன் நகையையும் பறித்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் இந்த சம்பவம் குறித்து லலிதாம்பிகை தனது கணவர் செந்தில் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் கிரி, டி. எஸ். பிக்கள் சிவபாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடியது. கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் இது வரை முகமூடி கொள்ளை சம்பவம் நடைபெற்றதில்லை. தற்போது தான் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி-மாலைமலர்

13 May 2012

அன்னையர் தினம் வாழ்த்துகள்

அன்னையர் தினம்.
இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது 'தாய்' என்ற ஸ்தானமாகும். தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு குழந்தையின் கரு உருவான காலக்கட்டத்திலிருந்து அதன் தாய் படும் கஷ்டங்களும், சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. குழந்தையை பெற்ற பின்னரும் அவள் படும் சிரமமும், அர்ப்பணிப்பும் ஏராளம். குழந்தையின் கழிவுகளை இன்முகத்தோடு சுத்தம் செய்யும் பாங்கும், அக்குழந்தைக்காக உணவையும், உறக்கத்தையும் தியாகம் செய்யும் தன்னலமற்றத் தன்மையும் தாயைத் தவிர வேறு எந்த உறவினால் ஆற்ற இயலும்?
இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையைய் அறிவது மிகவும் புண்ணியமான விஷயமாகும்.
தாய்: தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம். எந்த பெண் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ, எந்த பெண்ணை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அந்த பெண்தான் தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.
தாய் - தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.
தாய் - தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.
தாய் - எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.
தாய் - மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை 'அம்மா'.
தாய் - உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.
தாய் - 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.
தாய் - தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.
தாய் - தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.
தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:
தாய், தந்தை பேண் - (பேண் - விரும்பு தாய், தந்தையைய் விரும்பு.).
விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.
தாய்நாடு - நாம் நம் நாட்டை 'தாய்நாடு' என்று தான் கூறுகிறோம்.
தாய்மொழி - நாம் பேசுகின்ற மொழியைய் கூட 'தாய்மொழி' என்று தான் கூறுகிறோம்.
'மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே' - அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது தாய்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.
தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.
மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.
சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.
காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.
இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து 'பாத பூஜை' செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.
திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. 'தாயைய் பார்த்து பெண்ணெடு' என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.
தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:
நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.
என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.
தாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:
அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் 'தாய் மார்களே' என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து 'தாயே' என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே 'மனைவி' அல்லது 'காதலி' என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.
பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட 'தாயே' என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட 'தாயே' என்று தான் கேட்கிறாரே தவிர 'சிறுமியே பிச்சை போடு' என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.
திருக்குறள் கூறுவது:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.
விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.
"தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை!"
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துகள்.
நன்றி-சுட்டி

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி" சீ 'எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே
அவ்விருவரிடமும் கூறு!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!
அல்குர்ஆன் 17:23,24

06 May 2012

பன்றிக் கொழுப்பு உஷார்.


கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:

அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (தரக்கட்டுப்பாடு) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (பொருட்கள்) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (பொருட்கள்) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக மின்-904, மின்-141 என்று.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (பொருட்கள்) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.

சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?

உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம் ..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (பொருட்கள்) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (பன்றியின் கொழுப்பு) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (பன்றியின் கொழுப்பு) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (விலங்குகள் கொழுப்பு) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி. 1970 - லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (கோடிங் மொழி) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (மின் தேவையான பொருட்கள்) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

மின் தேவையான பொருட்கள் என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (சோளம் ஓடுகள்), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (மின் தேவையான பொருட்கள்) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

ஈ 100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325,

E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,

E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,

E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் -2:173)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி))

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி பி 1857 -. ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.

இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10 ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.

சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (எலைசெர் ஃபிஷர்) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.

தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri) யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.

04 May 2012

மறைக்கப்பட்ட உண்மையின் வரலாறு.

கச்சதீவு நமதே - ஆவணப்படம்.
சீதையின் மைந்தன் - கச்சதீவு மீட்பு இயக்கத்தினறால் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஓவ்வொரு தமிழனும் காணவேண்டும் என்ன ஒரு கொடுமை எப்படி எல்லாம் நம்மை எமாதுறாகபா.. இவ்வளவு ஆதாரங்கள் நம்மிடம் இருந்தும், நமது திரவிடக் கட்சிகள் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை
கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974 ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர் (1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
கி.பி. 1605 ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.
1972 - ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933 - ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899 - ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285,20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
1974 மற்றும் 1976 ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும். இந்த விதியை மீறி இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொண்று வருகிறது. 1960 ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி 2008 ம் ஆண்டு அதிமுக தலைவர் செயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தமிழக சட்டசபையில் சூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் ஆலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனகலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்பினர். 2011 ஆம் ஆண்டு ஆலயவிழா, மார்ச் 20 அன்று இரு நாட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன் சிறப்பாக நடந்தேறியது.

03 May 2012

AIADMK ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உதவியால் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த எங்கள் பள்ளிஇடம்.

கிடைக்குமா கிடைக்காத என்று எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு, இந்த நல் உள்ளங்கள் உதவியால் எங்கள் பள்ளிஇடத்தை மீட்டு தந்த நண்பர் ஊராட்சி மன்ற தலைவர்,K பகவதி அவர்களுக்கும், மற்றும் ஊராட்சி மன்றதுணை தலைவர் MS பாரிட் அப்துல் மாலிக் அவர்களுக்கும், மற்றும் எங்கள்பள்ளி இடத்தை மீட்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


25 April 2012

இதற்கு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?


கலைஞர் அய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்! சிரித்தபடி கேட்கும் சீமான் கேள்விகள்??????
இதற்கு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?
'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்' என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.
'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்' என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

'' ஆற்ற முடியாத காயங்களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவருடைய திடீர் 'தமிழீழ' ஆர்வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?

இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்தபோது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை' என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு' என்றீர்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை.

இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பௌத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பௌத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.

அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்' என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்' என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!

அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழ ஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்' என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்பதற்காக, இலங்கைத் தமிழர் ... இலங்கைத் தமிழர் என்று பேசிவந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?

இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை' என்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்தபோது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்பிடித்தீர்களே ஏன்?

நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்?

பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடினார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?

'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்' என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்' என்று அப்போது சொன்னது ஏன்?

'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்' என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?

'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது' என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபாய ராஜபக்ச கோபப்படுகிறாரே?

ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்?

இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க. வும் தி.மு.க. வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி. ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று குறிப்பிடவும்.



தமிழகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் ஆகிய 2 பேரும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணக்கெடுப்பின் போது குடும்ப தலைவர், தொழில், ஜாதி, மதம், வீடு, வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 20 வகையான கேள்விகளை வீட்டின் உரிமையாளரிடம் கணக்கெடுப்பாளர் கேட்பார். அந்த கேள்விகளுக்கான பதிலை அருகில் அமர்ந்து இருக்கும் புள்ளி விவர பதிவாளர் தன்னிடம் உள்ள மினி லேப்டாப்பில் பதிவு செய்து கொள்வார்.
தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் 'இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவிசெய்வது நல்லது.
முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம் 'என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற நமது ஊர் நண்பர்கள் இந்தசெய்தியை
தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்கவும்
சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று
குறிப்பிடவும்.

24 April 2012

மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம் என்ன பந்தயம் என்று கேட்பார்களா?



அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்துக்கள் தாண்டி, இன்று பரவலாக அனைத்து சமுதாய மக்களில் சிலரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் பக்தி முலாம் பூசப்பட்ட இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி நகைக்கடை வியாபாரிகள் நன்றாகவே கல்லா கட்டுகிறார்கள். தங்கம் விலை விமானத்தை விட உயர்வாக ரெக்கை கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்திலும் நகைக்கடையில் மண்ணள்ளி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு மக்கள் கூட்டம். எந்த அளவுக்கென்றால் ஏனைய நாட்களில் சாதாரணமாக பணத்துடன் சென்றால் நகை வாங்கிவிடலாம். ஆனால் இன்று முன்கூட்டியே டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே நகை வாங்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு சில பெரிய நகைக்கடைக் காரார்கள் டோக்கன் சிஸ்டம் கொண்டுவரும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்மையில் இது தெளிவான ஒரு மூடநம்பிக்கை என்று பல்வேறு காலகட்டங்களில் சிந்தனையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டாலும் மக்கள் தெளிவடைய மறுக்கிறார்கள். கீழ் வரும் இந்த செய்தியை படித்த பின்பாவது தெளிவடைவார்களா என்று பார்ப்போம்.

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கவுசல்யா என்ற இல்லத்தரசி அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கி, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவத்தை கூறியதாக தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள செய்தி;

'' எல்லோரும் சொல்கிறார்களே என்று, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று, நானும் என் கணவரும் ஒரு நகைக்கடைக்குச் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்று தங்க நாணயம் ஒன்றை வாங்கினோம். ஒரு வருடம் கடந்துவிட்டது.

இன்னும் ஓரிரு மாதத்தில் எங்கள் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடக்க உள்ளது. பேத்திக்கு தங்கத்தில் நகை செய்யலாம் என்று கருதி, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று வாங்கிய தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு, பொற்கொல்லர் ஒருவரிடம் சென்றோம். தங்க நாணயத்தை எங்களிடம் இருந்து வாங்கிய பொற்கொல்லர், நாணயத்தை மேலும் கீழும் திருப்பித் திருப்பி பார்த்தார்.

'' ஏம்மா, அட்சய திருதியை நாளில் வாங்கிய நாணயமா? என்று ஒருவித இளப்பமான தோரணையில் கேட்டுவிட்டு, மாற்று ரொம்ப கம்மியா இருக்கிறது அம்மா! ' என்று சொன்னார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. இனிமேல், 'அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதைவிட வேறு ஒரு நாளில் வாங்கினால் நல்லது' என்று உறுதிமேற்கொண்டேன். '
இவ்வாறு இல்லத்தரசி கவுசல்யா கூறினார்.
மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம்
என்ன பந்தயம் என்று கேட்பார்களா?
நன்றி-"TAMIL MUSLIM POLITICS"



தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு போயாச்சு அப்பாடி நிம்மதி அடுத்த தீபாவளி வரைக்கு தி நகர் அல்லது உங்கள் அருகில் உள்ள நகை கடைக்கு போகும் வேலை இல்லை அடுத்து ஸ்கூல் ஃபீஸ், யூனிஃபார்ம் லொட்டு லொசுக்குன்னு செலவு தானே அதுக்குள்ளே கோடை விடுமுறைக்கு குளு குளு ஸ்தலம் போலாம்னு அய்யாமார்கள் நினைக்கும் போது வீட்டில் உள்ள அன்னபூரணிக்கள் "அக்ஷ்ய திருத்திகை" எனும் மாடர்ன் காஸ்ட்லியான பண்டிகைக்கு ஒரு பொட்டு தங்கமாவது வாங்குனாதாங்க நம்ம டாப்பா இருப்போம்னு ஆரம்பிச்சு மினிமம் 4000 ரூவாய்ல இருந்து லட்சகணக்கில் ஹஸ்பன்ட் சேவிங்க்ஸை பங்க்ச்ர் ஆன டியூப் போல ஆக்கிவிடுவார்கள். இதில் பெரிய பீத்தல் வேற நாங்க பொம்பளைங்க கட்டும் சட்டுமா குடும்பம் நடத்தி இப்படி நாலு தங்க பொருளை வாங்கி வச்சாதான் ஆத்திர அவசரத்திற்க்கு உதவுதுன்னு வேற...... அந்த காலத்தில ஒரு லிட்டர் பாலுக்கு பதிலா அரை முக்கால்னு வாங்கி பால் கவர் போட்டு, பழை பேப்பர் வயர் கூடை ஸ்வெட்டர் எம்ப்ராய்டிரினு வீட்ல சும்மா இருக்கிற நேரத்தில் போட்டு நாலு காசை எட்டா சுருட்டி ஒவ்வொரு டப்பாவுல கையவிட்டு அம்மாக்கள் எடுத்து தந்த காலம் போய் நான் சொன்ன எந்த ஒரு விஷயத்தையும் செய்யாம சீரியல் பாத்தே நேரத்தை போக்கிட்டு புரட்சி போராட்டம்னு தி நகர்ல 75 கோடி பெருமானமுள்ள வீட்ல ஓனர் சின்ன சிவாஜி சொன்னா தப்பா இருக்காதுன்னு தங்கம் வாங்க தமிழகத்தில ஒரு அஃபிசியல் நாள் கிடைச்சாசுனு அன்னைக்கு போய் ஏமாறாதீங்க. ஏற்கனவே நோட்ஸ் போட்டு அது பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு இருந்தாலும் இதோ இன்னும் ரெண்டு நாள்ல அந்த அக்ஷய திருத்திகை வருதுன்னு கிளம்பிருவீங்களேன்னு தான் ஒரு அட்வான்ஸ் தங்க டாப் 10..........

1. எந்த பெரிய கடையிலேயும் தங்க காயின் வாங்கும்போது கேளுங்க சார் இதை திருப்பி கொடுத்தா அன்னையை விலையில எடுத்துப்பீங்களான்னு - ஒரு நல்லவர் கூட சொல்ல மாட்டாரு நாங்க வாங்கிப்போம்னு ( அதனால சும்மா வெட்டியா 4000 காசை கரியாக்காதீங்க)

2. நீங்க அவசரமா சேட்டு கடையாகட்டும், சேட்டன் கடையாகட்டும் நகையை விக்க அல்லது அடகு வைக்க போகும் போது தேங்கா சட்னி அரைக்கிற மாதிரி தேச்சி தேச்சி பார்த்திட்டு நம்ம மூஞ்சியை வேறு என்னமோ சம்பல் கொள்ளை நம்ம அடிச்ச மாதிரி பார்த்து பார்த்து அவன் கருங்கல்லை தங்க கல்லா மாத்திதான் யோசிப்பான் வாங்கலாமா அல்லது அடகு வைக்கலாம்ன்னு - ஆனா நம்ம மக்கள் ஒரு நாளாவது அந்த தங்கத்தை உரசி காட்டுங்கன்னு கேட்டிருக்கிங்களா?

3. நம்ம எண்ணம் எல்லாம் லட்சத்திற்க்கு நகையை வாங்கிட்டு பத்து ரூவா பெறுமானமுள்ள பிளாஸ்டிக் அல்லது சணல் பையை ஒன்னுக்கு ரெண்டு கேட்டு வாங்கிடம்னுதான் எண்ணம் - ஆமாவா இல்லையா

4. நாங்க வழக்கமா வாங்குற கடையில கேரட் மீட்டர், பீட்ரூட் மீட்டர் இருக்கு டக்குனு காட்டிடும்னு பல அப்பாவி புருசஷன்களை நம்ப வைக்காதீங்க இருவது ரூவாய்க்கு ஒரு கிலோ வெண்டைக்காயை ஒடிச்சு பாத்து வாங்கும் உங்க திறமை இதில காட்டுங்க.BIS Hallmark Certificate இருக்கன்னு பாருங்க அதுல நீங்க வாங்கற 85% தங்க காசுல இருக்காது அப்படி இல்லாம வாங்குற காய்ன் டேபிள் ஆடுனா அதுக்கு கூட முட்டுக்கு வைக்க லாய்க்கு இல்லை.

5. அப்படி வாங்கித்தான் தீருவேன்னு நினைச்சு என் பேச்சை நானே கேக்கமாட்டேன்னு சொல்ற ஆளா இருந்தா - அட்லீஸ்ட் போஸ்ட் ஆஃபிஸ்ல போய் வாங்குங்க கொஞ்சம் காஸ்ட்லி ஆனா 99.5 - 99.99 பியூரிட்டியுடன் கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கிற ரிலையன்ஸ் கோல்ட் காயின் வெரைட்டியை தவிர்க்கவும்.

6. நிறைய பேர் எளிதில் பிரிக்க முடியாத டஃப் பிளாஸ்டிக் மோல்டிங் போட்ட கோல்ட் காயின் தருவார்கள் அதை பிரிக்காமல் அப்படியே வைத்தால் அடுத்த வருஷம் அதுக்கு பேரிச்சம்பழம் கொட்டை கூட தர மாட்டாங்க பிரிச்சி பாருங்க உங்க ஆல்பர்ட் அயின்ஸ்டீன் மூளையை உபயோகிச்சு பரிசோதீங்க.....

7. பஜன்லால் சேட்டு கடையில் இருந்து பல்லாவரம் கோவாப்ரேட்டிவ் வங்கியில் கூட தங்க காயினுக்கு அடுகு ஸ்டேட்டஸ் "நஹி நஹி" தான் சில பேர் சொல்றாங்க ஸ்டேட் பேங்க்ல மட்டும் பிக்ஸட் டிபாஸிட் இருந்தால் எடுக்கிறாங்களாம் அது நம்ம காசை வாங்கி நம்மளுக்கே கடன் கொடுக்கும் கதை தான்.....

8. 4000 மினிமம் பச்சா நம்ம வீட்டு பாச்சாக்கு செலவு வெச்சே ஆவனும்னு நினைச்சா தயவு செய்து ஆன்லைன் கோல்ட் பன்டில் (பண்டு) மியூச்சவல் பண்டில் போடுங்கள் அல்லது எல் ஐ சி போன்ற இன்ஸூரன்ஸுல் போட்டால் குழந்தைகளின் பியூச்சருக்கு சோறு கியாரண்டி

9. தங்க பிஸ்கோத்து, தங்க கட்டி, தங்க கலசம், இதெல்லாம் அசோகன் வில்லனா நடிக்கும் படங்களில் வேணால் நல்லாயிருக்கும் நம்ம காலத்துக்கு தங்க காயின் யூஸ்ஃபுல் இல்லை, இப்ப இருக்கிற காலத்தில பொரம்போக்கு லேன்ட் வாங்கினா தங்க காயின், ஆயிரம் ரூவா மொபைல் போன் வாங்கினா தங்க காயின், டீவி வாங்கினா தங்க காயின், கொஞ்சம் நாள்ல கட்டண கழிப்பிடத்தில மலம் கழிச்சீங்கன்னா தங்க காயின்னு போடப்போரான் பாருங்க

10. ஒன்னு சாமி முன்னாடி அல்லது பீரோ உள்ளே உள்ள சேஃப்டி லாக்கர்ல வைக்கும் ஒரு சமாச்சாரத்தை நல்லதா நகையா அல்லது தங்கத்தை ஆச்சாரிகிட்ட சொல்லி (எங்கூர்ல தங்கம் உருக்குதல்னு ஒரு நிகழ்ச்சி கல்யானத்திற்க்கு முன் நடக்கும்) அதை வைத்து தான் கல்யானத்திற்க்கு தேவையான நகை தாலி போன்றவற்றை செய்வாங்க இன்னைக்கு அப்படியே ஜொலிக்கும் இப்ப வாங்குற நகைகள் பாலீஸ் போட்டே பாதி காசு காலி அதனால் நல்ல தங்கத்தை வாங்குங்க இல்லைனா அது வரைக்கும் வெயிட் பண்ணி நல்ல பொருளை வாங்குங்கள், நிறைய பேர் பெரிய கடைக்கு போக கஷடபட்டு பக்கத்துல இருக்கிற டுபாக்கூர் சேட்டுகளிடம் வாங்கி கடைசில அது நெத்தி காசுக்கு கூட லாயக்கில்லைனு தெரியும் போது வெளிய சொல்ல கூச்ச படுறாங்க அதனால் ஒரு கிராம் வாங்குனாலும் நல்ல கடையில் அல்லது போஸ்ட் ஆப்பீஸ்ல போய் வாங்குங்க தாய்க்குலங்களே......

கடைசி டிப்ஸ் - ஏற்கனவே பல படத்தில வந்த ஜோக்கு பீஸா ஆர்டர் பண்ணினா கூட 45 நிமஷத்தில வரான் ஆனால் ஆம்புலன்ஸ் வர 2 மணி நேரம் ஆகுதுன்னு, இப்ப ஜிவல்ஸ்னெக்ஸ்ட்.காம் கம்பெனியில போன் போட்டு ஆர்டர் பண்ணினா தங்கத்தை 30 நிமிஷத்தில ஹோம் டெலிவரி பன்றாங்களாம் என்ன கொடுமைடா...... யாரா இருந்தாலும் நான் போட்ட பத்து பாயின்ட்ஸை கேளுங்க 4000 சும்மா இல்லை பெரிய பணம் இன்னைக்கு - உங்களுக்கு என்று ஒன்று இருந்தால் அதை யாராலும் உங்களுக்கு கிடைப்பதை தடுக்கமுடியாது, உங்களுக்கு என்று இல்லாத பொருளை அந்த இறைவன் நினைத்தாலும் கொடுக்க முடியாது. தயவு செய்து பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் நிறைய அண்ணபூரணிகளுக்கு இந்த அவேர்னஸ் தேவை......... ஹேவ் ஏ ஹாப்பி அக்ஷய திருத்திகை
நன்றிRavi Nag