RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

27 November 2011

நீ ஏமாதுதான் நம் இனம் ரத்தகண்ணீரில் மீதக்கிறது............

தமிழா முல்லைபெரியார் உண்மை நிலை.
ஏமாறாதே தமிழா ஏமாறாதே..................
நீ ஏமாதுதான் நம் இனம் ரத்தகண்ணீரில் மீதக்கிறது............
போதும்மப்பா உன்தூக்கம்.


தொடர் வீடியோ காண.Link

25 November 2011

அப்பட்டமான உண்மை...கூற தைரியம் வேண்டும்.

சினிமா பற்றியும், MGRறை சுட்டதை பற்றியும் , MR ராதாகூறியது .
                                                இஸ்லாமியர் பற்றி  MR ராதாகூறியது .

22 November 2011

வேப்பத்தூர் வங்கியில் கொள்ளை முயற்சி


கும்பகோணம், நவ. 21: கும்பகோணம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது.
திருவிடைமருதூர் காவல் சரகத்துக்குள்பட்ட வேப்பத்தூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, சுற்றுப் பகுதி மக்கள் திரண்டு சென்று பார்த்த போது, வங்கியின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸôருக்கும், வங்கிக் கிளை மேலாளர் ரவிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது, வங்கியின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பாதுகாப்பு பெட்டக அறையை உடைக்க முயற்சி செய்துள்ளதும், அப்போது, வங்கியில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது.
கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் சம்பவ இடத்ûதைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி

20 November 2011

கும்பகோணத்தில் ஆறரை இலட்சம் கொள்ளை.

கும்பகோணம் அருகே பணப்பரிமாற்ற நடுவத்தில் இன்று காலை மர்ம நபர்கள் ரூபாய் ஆறரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 
கும்பகோணம் அருகே ஆடுதுறை பிரதான சாலையில் தனியார் பணப்பரிமாற்ற நடுவம் இயங்கி வருகிறது. இன்று காலை அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அதன் நிர்வாகியை கட்டிப்போட்டுவிட்டு கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு ரூபாய் ஆறரை லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகி திருவிடை மருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

கும்பகோணத்தில் சுகாதார வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை.கும்பகோணம் அருகே புதிய கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் கட்டப்படும் என்று ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் திருவாடுதுறை பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன் நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மழையால் சேதமடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும் என்றும், புதியதாக கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 


மேலும் செய்தி அறிய---Link

18 November 2011

கொரநாட்டு கருப்பூர் பெயர் உண்டான வரலாறு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திருப்பாடலவனம்(கருப்பூர்)
இறைவன் : ஸ்ரீசுந்தரேசர்
இறைவி : அபிராமி
தலவிருட்சம் : பாதிரிமரம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பாடலம் - பாதிரிமரம். பாதிரி மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் பாடலவனம் எனப்பெயர் பெற்றது.
சுந்திரம் - அழகு. இத்தலத்தில் உமாதேவியும், சிவபெருமானும் அழகிய கோலத்தில் வீற்றிருப்பதால் சுந்தரேசர் என்று பெயர் பெற்றார் இறைவன். இத்தலம் பழம்பெருமை கொண்டது.
தமிழ் முனிவரான அகத்தியர் இத்தலத்தில் நீராடி சுந்தரேஸ்வரரை பூசித்து பல வரங்களைப் பெற்றார் என்றும் வாக்கில்லியர் என்னும் முனிவர் சுந்தரேஸ்வரை வழிபட்டு இறைவனோடு கலந்தார் என்றும் இத்தலபெருமை கூறப்படுகிறது. குபேரனும், சுரதன் என்ற மன்னர்களும் வழிபட்டு பல்வேறு பலங்களைப் பெற்றனர் என குடந்தைப் புராணம் கூறுகிறது.
ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவலிங்கத்தை நிறுவி இறைவனை வழிபட்டு, இறுதியில் இறைவனிடம் ஞான உபதேசம் பெற்ற இடம் இந்தத் திருப்பாடலவனம் என்னும் கொரநாட்டுக் கருப்பூர்.
இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சன்னிதானத்தில் மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியும், தெற்கு நோக்கிய சன்னிதானத்தில் அபிராமி அம்மையும் வீற்றிருக்கின்றனர்.
பெட்டிகாளியம்மன் :
இக்கோயிலில் சக்தி மிக்க காளியம்மன் உள்ளது. அதை பெட்டியில் வைத்துள்ளனர். காளி உத்தரவு கொடுக்கும் போது அதற்கு விழா எடுக்கிறார்கள். இதற்கு பெட்டிகாளியம்மன் என்று பெயர். கருப்புநிற மகாகாளியம்மன் இடுப்பு வரை மட்டுமே உள்ள திருவுருவத்தோடு ஒரு பெட்டியில் காவிரியில் மிதந்து வந்து இத்தலத்தில் எழுந்தருளினாள். குறைந்த கருப்புக் காளி ஊர் என்றழைக்கப்பட்டு பின்னர் பேச்சு வழக்கில் குறைநாட்டு கருப்பூர் என்று மருவி இறுதியில் கொரநாட்டு கருப்பூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.
காளியம்மன் வரலாறு
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் காவிரியில் மிதந்து வந்த பெட்டி ஒன்று திருபாடலவனம் என்ற இவ்வூரின் காவிரிக் கரையில் ஒதுங்கியது. காவிரிப் படித்துறையில் பெட்டியைக் கண்ட மக்கள் திறந்து பார்த்த பொழுது அதில் மேல்பாதி மட்டும் உள்ள காளியின் சிலை இருக்க கண்டனர். மரத்தால் செய்யப்பட்ட பழமையான, நேர்த்தியான, அற்புதமான சிலை ஊர் மக்களும் ஆலய அர்ச்சகரும் கூடி என்ன செய்வது என திகைத்து நிற்க, அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு சிறுபெண் மேல் காளியின் அருள் வந்தது. அச்சிறு பெண் வாயிலிருந்து மலையாளமும், பிராகிருத மொழியும் கலந்த சொற்களில் மாகாளி தன்னை எப்படி எந்த வகையில் பூசிக்க வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறி அந்த சிறுபெண்ணை விட்டு நீங்கினாள்.
அதன்படியே அவ்வூர் மக்களும் மகாகாளியை பெட்டியில் வைத்து பூட்டி ஊரின் தென் பகுதியில் ஒரு ஓலைக் கொட்டகையில் வைத்து பூசித்தனர். பெட்டகத்தை திறக்கும் முன் அம்மனின் அருள் வாக்கின்படி அஷ்டோத்ர அர்ச்சனை செய்து அன்னம் முதலிய பிரசாதங்களை பெட்டி முன் வைத்து, பள்ளயம் போட்டு மகாகாளிக்கு அர்ப்பணித்த பின்னரே பெட்டித் திறக்கப்படும். இவ்வாறே இன்றும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் முடிவில் மகாகாளி பெட்டகம் இருந்த ஓலைக்கொட்டகை தீப்பிடித்து எரிந்து விட்டது. ஊர்மக்களும் பக்தர்களும் காளியிருந்த பெட்டகத்தை காப்பாற்றிவிட்டனர். பின்னர் என்ன செய்வது என்று காஞ்சிபுரம் காமகோடி பீடத்தில் அன்று பட்டத்திலிருந்த பரமாச்சாரியாரைக் அணுகிக்கேட்க அவரது ஆலோசனையின் பேரில் திருபாடலவனம் ஸ்ரீசுந்தரேஸ்வரசுவாமியின் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு அருகில் அபிராமி அம்மை சன்னிதிக்கு கிழக்குப் பகுதியில் அருள்மிகு சுந்தரமகாகாளியம்மன் பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை உத்தராயண காலத்தில் மகாகாளி பெட்டியினுள் இருந்தபடியே பல்லக்கில் புற்ப்பட்டு திருமஞ்சனவீதி உலா வருவாள். பல்லக்கு எப்பொழுதும் ஆடிக் கொண்டும், ஓடிக்கொண்டும் வரும். உக்கிர காளியின் ஆவேச வெளிப்பாடு அதுவாகும்
நன்றி-சுட்டி
பெட்டிகாளியம்மன் எனும் ஸ்ரீ சுந்தர மாகாளி
திருக்கோவில் அமைவிடமும், சிறப்புகளும்
கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கொரநாட்டு கருப்பூர் எனும் ஊரில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அபிராமி அம்மை சமேதராய் சுந்தரேஸ்வரர் அருளும் திருத்தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பாடலவனம். ஒரு காலத்தில் இங்கு பாதிரி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப் பெயர் உண்டானது. 

இத் திருக்கோவிலில், தனி சந்நதியில் ஒரு பெட்டியின் உள்ளே குடிகொண்டிருக்கின்றாள் ஸ்ரீ சுந்தர மாகாளி. பெட்டி ஒன்றின் உள்லே இருப்பதால் காளி அம்மன் என்றும் வணங்கப்படுகின்றாள். சாதாரண நாட்களில் பெட்டியினை மட்டுமே வணங்க முடியும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு கால வேலைகளில் மட்டுமே பெட்டிக்கு நைவேத்யம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெட்டி திறக்கப்பட்டு உள்ளே குடி கொண்டுள்ல ஸ்ரீ சுந்தர மாகாளியின் திரு உருவத்தினை தரிசன் செய்ய முடியும். அதுவும் சிறிது நேரம் மட்டுமே. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து முடித்த உடன் திரும்ப பெட்டி மூடப்படும். இத் திருக்கோவில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் என்பதைவிட பெட்டி காளி அம்மன் கோவில் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

திருத்தல பெருமைகளும் வழிபாட்டு பலன்களும்
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கிய திருத்தலம் இது. இத் திருக்கோவிலில் உள்ள சுந்தரேஸ்வரரை வழிபட்டே குபேரன் நவநிதிகளையும் காக்கும் பெரும் பேற்றினை பெற்றான். திசை ஒன்றின் அதிபதியுமானான் என்கின்றன நமது புராணங்கள். எனவே, இத் தல அபிராமி அம்மை சமேத சுந்தரேஸ்வரரை வழிபட்டால் பொன், பொருள், நல் மனைவி, மக்கட்பேறும் கிடைக்கும் என்பது திண்ணம். இத் திருத் தலத்தில் லஷ்மி குபேர யாகம் செய்வது பெரும் சிறப்பு. சகல ஐஸ்வர்யங்கலையும் வழங்கிடும். தேவர்கள் வந்து இங்கு வழிபட்ட பொழுது அம்மை சமேதராய் முக்கண்ணன் அழகு மிளிர காட்சி தந்ததால் சுந்தரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். அகத்திய மாமுனி வணங்கிய தலம் இது. வாலகீல்யர் என்ற முனிவர் ஒரு சித்ரா பௌர்ணமியன்று சுந்தரேஸ்வரரை வழிபட்டு அவரில் ஐக்கியமானார் என்பது ஐதீகம். சோமகேது என்ற மன்னனுக்கு புத்திரப் பேறு அளித்திட்ட திருக்கோயில் இது. இத்தல இறைவனை வணங்குபவர்கள் அனைத்து குறைகளும் நீங்கி, வளமான வாழ்வு பெற்றிடுவர் என்கின்றது திருக்குடந்தை புராணம். பெட்டி காளி அம்மனை வழிபட சகல் விதமான தோஷங்களும் நீங்கும் என்பது அனைவரும் கண்ட உண்மை. 

அபிராமி அம்மை சமேத சுந்தரேஸ்வரரை வழிபட பொன், பொருள், நல் மனைவி, மக்கட்பேறும் கிடைக்கும். இங்கு லஷ்மி குபேர யாகம் செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிடும். இத்தல இறைவனை வணங்குபவர்கள் அனைத்து குறைகளும் நீங்கி, வளமான வாழ்வு பெற்றிடுவர் என்கின்றது திருக்குடந்தை புராணம்
பெட்டிகாளியம்மன் திருத்தலம் வந்த வரலாறு
ஒரு சமயம் காவிரி நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்து இன்றைய கொரநாட்டு கருப்பூரில் கரை ஒதுங்கியது. அப்பொழுது அங்கு இருந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி அப் பெட்டியினை ஆற்றில் இருந்து எடுத்து கரையின் மீது வைத்தனர். அச் சமயம் அங்கிருந்த சிறுமி ஒருத்தியின் மீது அம்மன் வந்து, ' தானே இஷ்டப்பட்டு ஊரின் நன்மைக்காக இங்கு தாமாகவே வந்ததாகவும், தம்மை இங்கு வைத்து வழிபடவேண்டும்' என்றும் கட்டளை இட்டாள். அம்மனின் அருள் கண்ட மக்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அனைவரும் ஒன்று கூடி பெட்டியினை வைத்து வழிபட வேண்டி, குடிசை ஒன்றினை உருவாக்கி அதில் பெட்டியை வைத்து நித்தம் நித்தம் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். ஆனால் அடிக்கடி அந்த குடிசை தீப்பிடித்தது. வேறு கூரை மாற்றினாலும் மீண்டும் தீப்பிடித்து கூரை சாம்பலாகும். என்ன செய்வது என்று தெரியாது ஊர் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். மனம் கலங்கினர்.

அச் சமயம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாய் இருந்த சங்கராச்சார்யார் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடத்திற்கு வருகை புரிந்திருந்தார். இதனை கேள்வியுற்ற ஊர் மக்கள் ஒன்று குடி, காஞ்சி மகானிடம் சென்று தங்கள் குறைகளை கூறினர். இதனைக் கேட்ட காஞ்சி மகான் ஊர் மக்களுடன் கருப்பூர் வந்தார். பெட்டியினை திறந்து பார்த்தார். இடுப்பு வரையான உருவம் கொண்டு எட்டு கரங்களுடனான காளியின் திருவுருவம் கண்டார். மெய் சிலிர்த்தார். அம்மனை வணங்கினார். பின்னர் ஊர் மக்களிடம் " காளி மிக உக்கிரமாக இருக்கின்றாள், இவளை இந்த குடிசையில் வைத்து வணங்குவது தவறு. எனவேதான் குடிசைகள் தீப்பிடிக்கின்றன. இவளது உக்கிரம் தணிக்க, பெட்டியுடன் அம்மனை எடுத்து சென்று சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வணங்குங்கள். ஊர் செழிக்கும் " என நல்லாசி கூறினார். ஊர் மக்களும் அவ்வாறே காளியினை பெட்டியுடன் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து ஸ்ரீ சுந்தர மாகாளி என்ற திருநாமத்துடன் வணங்கி வருகின்றனர்.

பெட்டி காளி அம்மனை வழிபட சகல வித தோஷங்களும் நீங்கும். அஷ்ட நாக கன்னியரை, பெட்டிகாளிக்கு உகந்த, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு, பின்னர் பெட்டி காளிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நாக தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் தீர்கின்றன.
இத் திருத்தலம் பல பெருமைகளை கொண்டது என்கிறது தல புராணம். பிரம்ம தேவர் இங்கு சிவ லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், குபேரன் இங்குள்ள திருத்தல புஷ்கரணியில் திருநீராடி, கடும் தவம் செய்து, அம்மையப்பனாய் சிவ தரிசனம் கண்டதாகவும் கூறுகின்றது தல புராணம். உட் சுற்று பிரகாரத்தில் குரு பகவானுக்கு நேர் எதிரில் தனி சந்நதியில் வீற்றருளும் அஷ்ட நாக கன்னியரை, பெட்டிகாளிக்கு உகந்த நேரமான செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு, பின்னர் பெட்டி காளிக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நாக தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் தீர்கின்றன. குபேரன் சிவபெருமானை வழிபட்டு நவநிதிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பினை பெற்றதால், இங்கு லஷ்மி குபேர பூஜைகள் செய்வது சிறப்பு. தீபாவளிக்கு மறுநாள் லஷ்மி பூஜைக்கு உகந்த நாளாகும். இதனை கேதார கௌரி நோன்பு என்பர். அன்றைய தினம், இத் திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து சிவனையும், அம்பளையும், பெட்டி காளியையும் வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் வந்து சேர்ந்திடும் என்பது நிச்சயம்.கும்பகோணம் சுற்றி உள்ள நவக்கிரக கோவில் பற்றிதேறிந்துகொள்ள.
சுட்டியை காணவும்
நன்றி-சுட்டி

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்"



என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழிதானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்கலா என்று கேடான் .நான் ஆஜ்ஜிரியத்தோடோடு ஆம் என்றேன் .

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏலு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிரார்கள்.
அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை .. நன்றி .

என் நண்பன் சொன்னதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்று நினைத்தேன். எனக்கு பெருமையாக இருக்கு நானும் தமிழன் என்றுசொல்ல.நன்றி. /இப்படிக்கு _ (ஈழம் தமிழ்)


நன்றி Sri Davei

குடந்தையில் சாலை, குடிநீர்ப் பணிகளுக்கு ரூ. 15 கோடி: நகர்மன்றத்தில் தீர்மானம்

கும்பகோணம், நவ. 16: கும்பகோணம் நகரில் சுமார் ரூ. 15 கோடியில் சாலை, குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது என புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 நகர்மன்ற சாதாரண கூட்டத்திற்கு அதன் தலைவர் ரத்னா சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜா நடராஜன், ஆணையர் வரதராஜன் மற்றும் அலுவலர்கள், நகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
 தொடர்ந்து பேசிய நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜன், நகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியை விரைவாக மேற்கொண்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.
 திமுக உறுப்பினர் சு.ப. தமிழழகன் பேசும்போது, திமுக உறுப்பினர்கள் சார்பில், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் தமிழக அரசு பணிக்கு சேர்க்க வலியுறுத்தி கொடுக்கப்பட்ட தீர்மானத்தை நகர்மன்றம் எடுத்துக்கொள்கிறதா இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
 அப்போது பேசிய துணைத் தலைவர் ராஜாநடராஜன், தமிழக அரசு எடுத்த முடிவிற்கு நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதால் பயன் இல்லை என்றார்.
 தொடர்ந்து, அந்தப் பொருளை நகர்மன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினர்கள் 18 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
 இதையடுத்து, நகர்மன்றத் தலைவரால் கொண்டுவரப்பட்ட, சுற்றுலா நகரமாக விளங்கும் கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைத்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றி, தமிழக முதல்வருக்கும், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் அனுப்பி வைப்பது, கும்பகோணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் நகராட்சியால் வசூல் செய்யப்படும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும், இதைத்தொடர்ந்து, 10 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 தொடர்ந்து நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5.70 கோடியில் 62 சாலைப் பணிகளும், ரூ. 9.25 கோடியில் 7.5 கி.மீ. தொலைவிற்கு குடிநீர் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதையடுத்து நடைபெற்ற விவாதத்தில், திமுக உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி பேசும் போது, பழுதடைந்துள்ள சாலைகள் மேம்பாட்டுத் திட்டப் பணியில் எடுக்கப்படவில்லை என்றார்.
 திமுக உறுப்பினர் கண்ணன் பேசும் போது, 45-வது வார்டில் உள்ள இளங்காநகர் சாலை பல ஆண்டுகளாக மிகவும் மோசமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 திமுக உறுப்பினர் சுப்பிரமணியன் பேசும் போது, 15-வது வார்டு குடிசைத் தெருவுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நன்றி தினமணி., 

15 November 2011

கணவரை ‘கைக்குள்’ வைப்பது எப்படி?



உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? ‘ஆமாம், ஆமாம்’ என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது.
கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..
காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.
கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.
கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.
என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.
கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.
கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

மேலும் படிக்க  linkகிலிக் செய்யவும்................... 

10 November 2011

போலீஸ் பக்ருதீன் கைது இல்லை: ஐகோர்ட்டில் தகவல்

சென்னை, நவ. 10: போலி என்கவுண்டரில் தனது நண்பரை கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் எம். அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனது நண்பர் பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த நவம்பர் 2-ம் தேதி சென்னை ஆலந்தூரில் கைது செய்தனர்.  எனினும், இதுவரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.
எனது நண்பரை போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.  அவரை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது.
எனவே,  பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அப்துல்லா வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி. நாகப்பன், டி. சுதந்திரம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொள்ளும் வழியில், அதாவது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகக் கூறி, திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய எஸ். அப்துல்லா, ஆர். இஸ்மாத் ஆகியோர் கடந்த நவம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இந்த சம்பவத்தில் பக்ருதீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர்.
எனவே, பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர். எனினும், இதுவரை அவர் தலைமறைவாகவே உள்ளார்.   
இந்நிலையில், பக்ருதீனை கைது செய்ததாகவும், அவரை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அப்துல்லா கூறியுள்ளார். இதில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை நாங்கள் பக்ருதீனை கைது செய்யவில்லை என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நன்றி-----தினமணி

வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய உரை

07 November 2011

இரண்டு பெண்களிடம்15 பவுன் நகை பறிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் சிவநேசன் மனைவி காந்திமதி (56). இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 5.45 மணிக்கு துர்க்காதேவி என்ற பெண்ணுடன் வாக்கிங் சென்றார். அவர் ரோட்டில் நடந்து சென்றபோது டூவீலரில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி காந்திமதி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் பட்டை தாலி செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள்.கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி நாகரெத்தினம் (49). மின்வாரியத்தில் கணக்குப்பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். நேற்றுமுன்தினம் காலை நாகரெத்தினம், அவரது தோழி ஜமீலாபீவியும் கொரநாட்டு கருப்பூரில் இருந்து சென்னை ரோட்டில் வாக்கிங் சென்றார். அவர்கள் கொரநாட்டு கருப்பூர் நத்தம் பிரிவு சாலை அருகே நடந்து வந்தபோது இரண்டு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கத்தியை காட்டி நாகரெத்தினம் அணிந்திருந்த 10 பவுன் நகையை அறுத்துச் சென்றனர்.
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010,03:30 IST
நன்றி தினமலர்