RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

20 November 2011

கும்பகோணத்தில் ஆறரை இலட்சம் கொள்ளை.

கும்பகோணம் அருகே பணப்பரிமாற்ற நடுவத்தில் இன்று காலை மர்ம நபர்கள் ரூபாய் ஆறரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 
கும்பகோணம் அருகே ஆடுதுறை பிரதான சாலையில் தனியார் பணப்பரிமாற்ற நடுவம் இயங்கி வருகிறது. இன்று காலை அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அதன் நிர்வாகியை கட்டிப்போட்டுவிட்டு கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு ரூபாய் ஆறரை லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகி திருவிடை மருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

கும்பகோணத்தில் சுகாதார வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை.கும்பகோணம் அருகே புதிய கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் கட்டப்படும் என்று ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் திருவாடுதுறை பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன் நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மழையால் சேதமடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும் என்றும், புதியதாக கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 


மேலும் செய்தி அறிய---Link

No comments: