RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

22 November 2011

வேப்பத்தூர் வங்கியில் கொள்ளை முயற்சி


கும்பகோணம், நவ. 21: கும்பகோணம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது.
திருவிடைமருதூர் காவல் சரகத்துக்குள்பட்ட வேப்பத்தூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, சுற்றுப் பகுதி மக்கள் திரண்டு சென்று பார்த்த போது, வங்கியின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸôருக்கும், வங்கிக் கிளை மேலாளர் ரவிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது, வங்கியின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பாதுகாப்பு பெட்டக அறையை உடைக்க முயற்சி செய்துள்ளதும், அப்போது, வங்கியில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது.
கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் சம்பவ இடத்ûதைப் பார்வையிட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி

No comments: