RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

16 December 2016

மனிதநேயம்

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும் தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதுமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். இறைவன் மனிதனுக்கு பயன்படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே மனிதனை உருவாக்கியுள்ளான்.

:நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். அல்குர்ஆன் (41 : 34)



14 December 2016

பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடித்து விட்டோமோ?

பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.

நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி,
இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா?
India’s Botched War on Cash.
என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.

எனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். பிளஸ் 2 வில் 1000 மார்க்குக்கு மேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் முடியவே முடியாது சார்" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.

சார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000 / -க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செலவு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு. . .

பணமில்லா வர்த்தகம்

பிஓஎஸ் மெஷின் வாடகை மாதம் 850 * 12 10,200.00

ஒரு நாளைக்கு 6000 / - ரூபாய்க்கு 0.75% பிஓஎஸ்
பரிவர்த்தனை கட்டணம் 45 / - 365 நாளைக்கு 45 * 365 16,425.00

அடுத்த நாள் வீட்டு செலவிற்கு ஏடிஎம் இல் பணம்
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23 / -சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230 * 12 276.00

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 30 / -, X 4 காலாண்டு 120.00

வங்கி வைத்து புத்தகத்தை / ஃபோலியோ குற்றச்சாட்டுக்கள், போன்றவை 200.00
--------------
மொத்த வங்கி 27,221.00 கட்டணங்கள்
--------------
இதை தவிர, பிஓஎஸ் மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000 / - ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000 / -).

இதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000 / - வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000 * 365 = 21,90,000 / -. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் டின் வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100 / - ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200 / -. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500 / -. டின் மற்றும் நிரந்தர கணக்கு எண் வாங்க முதலீடு 1000 / -.

இவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500 / -. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000 / - வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16% .இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.

இதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் ஒரு மையத்தோடு பரிமாற்ற கட்டணம், நான் பொருளை வாங்கும்போது பிஓஎஸ்
குற்றச்சாட்டுக்கள் என 16% லாபத்தில் நஷ்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு,
வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும்.
அவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா? குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.

கறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடித்து விட்டோமோ?என்ற அச்சம் எழாமலில்லை ..
நன்றி--BK Mohideen

09 December 2016

பெற்றோர்களை பேணுவோம் ....

உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) 'சீ ...' என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள். அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)

உன் வம்சம் நீட்டிக்க உனக்கு மகன் பிறந்திருக்கிறான்.



சொல்கேட்டு பிரசவத்திருக்கும் மகனையும் மனைவியையும் காண ஓடோடி வருகிறான். கட்டிலில் துயில் கொண்டிருக்கும் மகனைக் காண்கிறான். பால் போதாமல் வீறிட்டழுது உறங்குகிறான். உரைக்கிறாள் மனைவி.

நடு இரவு. மகன் அழும் சத்தம் கேட்டு எழுகிறான். மனைவி கைகளில் வைத்து அழுகையை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். "ஏங்க! பால் ஜீரணமாகலை மருந்து கடை திறந்திருந்தால் கிரேப் வாட்டர் வாங்கி வாங்க."

24 மணி நேரம் மருந்தகம் தேடி ஓடுகிறான். "எனக்கு தூக்கமே இல்லை. தொட்டில் கொஞ்சம் ஆட்டுங்க", மனைவி சொல் ஏற்கிறான். பணியகத்திற்கு போன் வருகிறது. "பிள்ளைக்கு பேதியாகிறது. ஆஸ்பத்திரி வந்தேன் பெட்டில் சேர்க்கச் சொல்கின்றனர். உடனே வாங்க."


24 மணி நேரம் மருந்தகம் தேடி ஓடுகிறான். "எனக்கு தூக்கமே இல்லை. தொட்டில் கொஞ்சம் ஆட்டுங்க", மனைவி சொல் ஏற்கிறான். பணியகத்திற்கு போன் வருகிறது. "பிள்ளைக்கு பேதியாகிறது. ஆஸ்பத்திரவந்தேன் பெட்டில் சேர்க்கச் சொல்கின்றனர். உடனே வாங்க."


மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் 10 நாள் அலைகிறான். தொழில் கெடுகிறது. சம்பளம் பிடிக்கப்படுகிறது. சில, பல ஆயிரங்கள் செலவுடன் வீடு திரும்புகின்றனர். "ஏங்க! போன மாதம் அப்பாயின்மெண்ட் வாங்கின மாதிரி இந்த மாதமும் அப்பாயின்மெண்ட் வாங்கணும். சளி ரொம்ப இருக்கு சாயந்தரம் வாங்கிடுங்க" .வேலைக்கு பெர்மிஷன் போட்டு வாங்கி வருகிறான். மருத்துவமனை எழுத்தர், "சார் ரிப்போர்ட் கார்டு புல் ஆயிடுச்சு 10 ரூபாய் கொடுங்க" கேட்கிறார்.

கொடுத்தவன் பழைய அட்டையை பார்க்கிறான். இத்தனை முறையா மருத்துவரிடம் வந்திருக்கிறோம்! அவனுக்கே மலைப்பு ஏற்படுகிறது.


3 வயது முடிந்தது. சிறந்த கல்விக்கூட தேடல் நடத்துகிறான். விருப்பமான நிறுவனங்களில் ஏறி இறங்குகிறான். சமுதாயத்தின் வீழ்ச்சி அவன் சட்டையை பிடித்து கீழே தள்ளுகிறது. முயற்சி திருவினையாக்க, நன்கொடை தந்து ஒரு கல்விச்சாலையில் சேர்ப்பித்து மகிழ்ச்சியுடன் திரும்புகிறான்.


என்னால தினமும் ரெண்டுவேளை ஸ்கூல் போய் வரமுடியலை "மனைவி மறுக்க ஆட்டோ அமர்த்துகிறான். காலம் சுழல்கிறது. காலாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் பெயிலானதால் ஆசிரியர் அழைக்கிறார். திரும்பிய பிறகு மகன் மீது தொடர் கவனம் செலுத்துகிறான். தனி கோச்சிங் ஏற்பாடு செய்கிறான்.

மனைவிக்கு தினமும் பணியகத்திலிருந்து போன் செய்து மதரஸா சென்றானா? டீயூசன் போனானா விசாரிக்கிறான். மகன் கேட்கும் செருப்பு, சூ, உடை, சைக்கிள் எல்லாம் வாங்கித் தருகிறான். விடுமுறை நாட்களை வீணாக்காமல் எதிர்காலத்துக்குப் பயனளிக்கக்கூடிய கணினி, இன்ன பிற வகை பயிற்சிகளுக்கு பணம் கட்டி தினமும் கொண்டு போய்விட்டு அழைத்து வருகிறான்.

எஸ்.எஸ்.எல்சி, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ தனி கோச்சிங் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வழி செய்கிறான். முன் முயற்சியாக, கல்லூரிகளை விசாரிக்கிறான். பரீட்சையில் மகன் மதிப்பெண் கூடுதலாக எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கிறான். விடா முயற்சிக்குப் பிறகு விரும்பிய கல்லூரி அமைகிறது.

பட்டப்படிப்பை மகன் நிறைவு செய்கிறான். பணியில் அமர்கிறான். நாட்கள் நகர்கின்றன. பெண் பார்க்கும் படலம். தந்தையும், தாயும் நுணுகி ஆராய்ந்து பெண் தேர்வு செய்து திருமணம் நடத்தி வைக்கின்றனர். பெயரன், பேர்த்தி பிறக்கின்றனர். கொஞ்சி மகிழ்கிறான்.

மொத்தக் குடும்பத்துக்கும் காபந்தாளனாக திகழ்கிறான் தந்தை. ஒரு மகனுக்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்து உலகில் வாழ நிலை நிறுத்தும் தந்தைக்கு மகன் செய்யும் உதவி என்ன?

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

தந்தை, தாய் மனம் நோக விடாது செயலாற்றுதல்.

இயலாமை காலத்தில் ஊன்றுகோலாக உதவுதல்.

உடன் பிறந்தோரை அரவணைத்தல்,

அன்போடு பேசுதல்,

இறை பயம் உள்ளவனாக, அறிவைத் தேடுபவனாக, அடக்கவானாக, கருணையாளனாக, கண்ணியமிழக்காதவனாக வாழ்ந்து, அவன் வாழ்க்கையை பார்க்கும் ஊர் மக்கள் இந்த மகனைப் பெற்றெடுக்க, இவன்

தந்தை என்ன புண்ணியம், இறை துதித்தல் செய்தானோ! புகழத்தக்க வகையில் வாழ்பவனே சிறந்த மகன்.

என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக! "என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

வள்ளுவம் கூறுகிறது,


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல் ".



நன்றி பெற்றோரும் பிள்ளைகளும்

பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே

இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?


ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)



அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள்.
நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!


அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை (ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா -2282)


(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17: 23)


ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரியஅடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கானசொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்

07 December 2016

தமிழகமுதல்வர் மறைவையொட்டி கும்பகோணம்



நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் மக்கள் பலர் தவித்து வந்தனர், இஸ்லாமியர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கி, பயணிகள் இரவு தங்குவதற்கு பெரிய பள்ளிவாசலில் இடம் ஏற்பாடு செய்யபட்டதை அதை பேருந்து நிலையத்தில் மைக்கிலும் அறிவிப்பு செய்யபட்டது இஸ்லாம் காட்டித்தந்த வழி இதுதான்,.

06 December 2016

அவமானப்பட்டவரை அமைச்சராக்கி அழகுபார்த்த ஜெ ...




ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரை தனது கட்சிக்குள்ளே மதிப்பு குறைவாக நடத்துகிறார்கள் என்ற செய்தி கேட்டு வருந்திய முன்னாள் ஜெயலலிதா அவரை அமைச்சராக்கி அழகு பார்த்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், 2001 சட்டப்பேரவை தேர்தலின் போது ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும் கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் கட்சிக்கள் சில உறுப்பினர்கள் புகார் கூறினர். உடனே அந்த குறிப்பிட்ட அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார்.


"என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தர முடியாத உன்னால ??" என்று அந்த வேட்பாளரை ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

"அம்மா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்தவன், என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க, செஞ்சதெல்லாம் வீணா கொட்ட வேண்டி இருக்கு, எல்லாருக்கும் வாங்கி கொடுக்க எனக்கு வசதியும் இல்ல, என்னை மன்னிச்சுருங்க என்று அந்த வேட்பாளர் கதறுகிறார்.

"அப்படியா விஷயம், சரி நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி" என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அந்த வேட்பாளர் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். யாரும் எதிர்பாராத விதமாக அவரை உணவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார்.

தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது வரவேற்பு என்று ஊடகங்களுக்கு செய்தியாகவும், அந்த அமைச்சர் சாந்திருக்கும் சமூகதினருக்கு அது அங்கீகாரம் என மக்கள் தரப்பில் பேசப்பட்டது.


ஆனால், அந்த செயலின் உண்மையான அர்த்தம்

"நீ தாழ்ந்த ஜாதினு சொல்லி உன் வீட்டு சாப்பாடு வேண்டாம் என்று சொன்னார்களா! இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற" என்று ஜெயலலிதா சொல்லாமல் சொன்னார்.

அவரின் ஒவ்வொரு அதிரடியான முடிவிற்கு பின்னால் இப்படி ஓரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கக்கூடும் ... !!
 இரும்புபெண்மணி ஜே.ஜே.

அந்த அமைச்சர் வேறு யாருமில்லை இப்போதைய சபா நாயகர் தனபால்தான்

நன்றி http://www.newsfast.in/news/jayalalitha-passed-away-5mz2r2

பன்றிக் கொழுப்பு


கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:

அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (தரக்கட்டுப்பாடு) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (பொருட்கள்) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (பொருட்கள்) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக மின்-904, மின்-141 என்று.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (பொருட்கள்) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.

சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?

உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம் ..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (பொருட்கள்) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (பன்றியின் கொழுப்பு) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (பன்றியின் கொழுப்பு) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (விலங்குகள் கொழுப்பு) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி. 1970 - லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (கோடிங் மொழி) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (மின் தேவையான பொருட்கள்) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

மின் தேவையான பொருட்கள் என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (சோளம் ஓடுகள்), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (மின் தேவையான பொருட்கள்) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

ஈ 100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325,

E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,

E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,

E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் -2:173)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி))

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி பி 1857 -. ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.

இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10 ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.

சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (எலைசெர் ஃபிஷர்) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.

தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri) யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.

I AM COME BACK

I AM COME BACK........