RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

26 December 2011

தமிழா நீயா இப்படி?


தமிழா நீயா இப்படி?
எழுந்திரு தமிழா எழுந்திரு.
தமிழன் தோற்றால் தமிழனே சிரிப்பான்
மற்றவன் தோற்றால் மனமெல்லாம் பதைப்பான்
அந்நியன் வெற்றிக்கு ஆளாய் பறப்பான்
தன்னவன் எழுந்தால் தலை மேல் அடிப்பான்
தமிழர்களே உங்கள் கடைகளை அடைத்து, உங்கள் எதிர்ப்பை தெரிவித்து, உங்கள் வருமானம் பாதிப்பதால் கேரளா மலையாளிக்கு என்ன நட்டம் .
நீங்கள் உண்ணா நிலை, சாலை மறியல், தொடர் வண்டி மறியல், என்று உங்களை நீங்களே வருத்தி கொள்வதால் அவனுக்கு என்ன நட்டம்.
இதுவரை கடையைப்பு என்று நடத்தியதில் இதுவரை 2000 கோடிக்கு மேல் தமிழர்களுக்கு தமிழக அரசுக்கு நட்டம் ஏற்படுதிருக்கிறோம் .
போராட்ட வடிவத்தை மாற்றுங்கள் நட்டத்தை இங்குள்ள மலையாளிகளுக்கு ஏற்படுத்துங்கள்.நீங்கள் கடையை திறந்து வணிகம் செய்யுங்கள்.அவன் கடையை அடைக்கட்டும். 
தமிழர்களே மாபெரும் சதி வேலை உங்களை சுற்றி நடக்கிறது. 
மக்கள் புரட்சியே முல்லை பெரியாரின் மீட்சி. 
கேரளாவில் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக இங்குள்ள ஊடகங்கள் பொய் செய்தியை பரப்பி வருகின்றன .
கேரளாவில் தக்காளி முதற்கொண்டு அனைத்தின் விலையும் 20 ற்குள் அடக்கம் .
மூணாறு போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே சிறிது விலை உயர்ந்துள்ளது .
தமிழர்கள் பொருட்களை, கேரளாவிற்கு அனுப்ப வேண்டாம் என்றே அங்குள்ளவர்கள் கூறுகிறது.ஆனால் மாற்று ஏற்பாடுகளை அவர்கள் செய்து விட்டார்கள்.
இங்குள்ள அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், இதை மறைத்து கேரளா மீது பொருளாதார தடை என்ற பாதையை நோக்கி மக்களை திசை திருப்பிகிறது .
இயல்பாக மலையாள மக்கள் மீது தமிழர்களுக்கு வர வேண்டிய சினத்தை திசை திருப்பி தமிழர்கள் தாக்குதல் தொடுக்காமல் இருக்க அங்கு விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டது.நம் உதவி இல்லாமல் அவர்களால் வாழ முடியாது என்று கூறி நம் போராட்டதை மழுங்கடிக்க மாபெரும் சதி வேலை நடக்கிறது .
இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேரளா மாவட்ட ஆட்சியரிடம் அங்குள்ள தமிழர்கள் மனு கொடுத்தனர் .அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
அந்த மாவட்ட ஆட்சியர் தமிழர்.
அவர் மனு வாங்கியதற்காக அவர் பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது அவர் கூறியது என்னை தமிழன் என்பதற்காக பணி மாறுதல் செய்கிறார்கள்.அவர்கள் இருப்பது ஐந்து ஆண்டு காலம் மட்டுமே.நான்50 வயது ஆகும் வரை இருப்பேன் ங்கு சென்றாலும் நியாத்தின் பக்கம்மே இருப்பேன் என்றார்.

எம் ஜி ஆர் அவர்கள் தமிழ் இனத்தின் நண்பனா?

கலைஞர்கருணாநிதி அவர்கள் இவரை மலையாளி என்று அவ்வப்போது குறிப்பிட்டதால் எம் ஜி ஆர் நாமெல்லாம் திராவிடர்கள் எனவே அதி மு க தொண்டர்கள் அழகான படித்த திராவிட பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பொது குழுவில் தீர்மானம் போட்டார் 
அவர் மறை முகமாக சொன்னதை புரிந்து கொண்ட தமிழர்கள், தொண்டர்கள் மலையாள பெண்களை ஏராளமானவரை திருமணம் செய்த்தனர்.
தமிழக அரசு துறைகளில் மலையாள மக்களை கொண்டு வந்தவர் எம் ஜி ஆர்.அப்பொழுது அரசு துறையில் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான மலையாளிகள் இன்று வரை ஒய்வு பெறவில்லை அவர்கள் பெற்ற பிள்ளைகள் இன்று அரசு துறை ஊழியாராக உள்ளனர்.
இங்குள்ள தேநீர் கடைகள் மற்றும் தொழில் துறைகளில் அவர் காலத்தில் மலையாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழர் நாட்டில் லட்சக்கணக்கில் குடியேறினர் . 
136
அடி நீரை தேக்கினால் போதும் என்று ஒப்பந்தம் போட்டவர் யார்? எம் ஜி ஆர் தானே! அது தானே இன்று வரை கேரளா அரசு சொல்லுகிறது. 
நல்ல வேலை எம் ஜி ஆர் இன்று உயிரோடு இல்லை இருந்திருந்தால் இங்குள்ள தமிழர்கள் முல்லை பெரியாரையும் விட்டு கொடுதிருப்ப்பர்.
கேரளாவிற்கு செல்லும் 13 வழித்தடங்களை அடைக்கும் போராட்டத்தில் ஒரு தடமாக, பொள்ளாச்சி அருகே உள்ள வளத்தியா மரம் என்னும் இடத்தில் ஐயா தியாகு தலைமையில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கைதாகி மாலை விடுவிக்கப் பட்டனர் .
சென்னையில் இருந்து தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான் தலைமை ஏற்க, நாங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். 

இது வரை எந்த விதமான அரசியல் போராட்டங்களாக இருந்தாலும் அந்த அரசியில் கட்சியை சார்ந்த தலைவர்கள் தலைமையில் மட்டுமே நடை பெரும் .
வை கோ நடத்திய இந்த போராட்டம் மக்கள் சார்ந்த போராட்டமாக அமைந்தது .ஒவ்வொரு வழி தடங்களிலும் பல்வேறு அரசியைக் கட்சி தலைவர்கள், மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் தலைமை தாங்கினார்.
ம தி மு க மாவட்ட பொறுப்பாளர்களும் உட்பட ஏராளமான தொண்டர்களும் மாற்று தமையின் கீழ் போராடியது அரசியலில் நல்ல மாற்றம்.
முல்லை பெரியாறு அணையை காப்பாற்றுவது மட்டுமே இலக்கு என்ற அடிப்படையில் வை கோ அவர்களின் இந்த கூட்டு போராட்டமும், மாபெரும் மக்கள் சக்தியும் இணையும் பொழுது, வெற்றி தமிழர்களுக்குத்தான் என்பதில் மாற்று கருத்தில்லை
நமக்கு திராவிடண் என்றவார்த்தைவேண்டாம்.
தமிழன்அழித்தது எல்லாம் தோல்வியால் அல்ல,துரோகதால்தான்