RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

25 April 2012

இதற்கு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?


கலைஞர் அய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்! சிரித்தபடி கேட்கும் சீமான் கேள்விகள்??????
இதற்கு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?
'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்' என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.
'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்' என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

'' ஆற்ற முடியாத காயங்களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவருடைய திடீர் 'தமிழீழ' ஆர்வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?

இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்தபோது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை' என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு' என்றீர்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை.

இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பௌத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பௌத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.

அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்' என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்' என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!

அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழ ஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்' என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்பதற்காக, இலங்கைத் தமிழர் ... இலங்கைத் தமிழர் என்று பேசிவந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?

இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை' என்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்தபோது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்பிடித்தீர்களே ஏன்?

நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்?

பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடினார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?

'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்' என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்' என்று அப்போது சொன்னது ஏன்?

'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்' என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?

'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது' என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபாய ராஜபக்ச கோபப்படுகிறாரே?

ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்?

இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க. வும் தி.மு.க. வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி. ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று குறிப்பிடவும்.



தமிழகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் ஆகிய 2 பேரும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணக்கெடுப்பின் போது குடும்ப தலைவர், தொழில், ஜாதி, மதம், வீடு, வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 20 வகையான கேள்விகளை வீட்டின் உரிமையாளரிடம் கணக்கெடுப்பாளர் கேட்பார். அந்த கேள்விகளுக்கான பதிலை அருகில் அமர்ந்து இருக்கும் புள்ளி விவர பதிவாளர் தன்னிடம் உள்ள மினி லேப்டாப்பில் பதிவு செய்து கொள்வார்.
தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் 'இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவிசெய்வது நல்லது.
முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம் 'என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற நமது ஊர் நண்பர்கள் இந்தசெய்தியை
தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்கவும்
சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று
குறிப்பிடவும்.

24 April 2012

மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம் என்ன பந்தயம் என்று கேட்பார்களா?



அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்துக்கள் தாண்டி, இன்று பரவலாக அனைத்து சமுதாய மக்களில் சிலரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் பக்தி முலாம் பூசப்பட்ட இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி நகைக்கடை வியாபாரிகள் நன்றாகவே கல்லா கட்டுகிறார்கள். தங்கம் விலை விமானத்தை விட உயர்வாக ரெக்கை கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்திலும் நகைக்கடையில் மண்ணள்ளி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு மக்கள் கூட்டம். எந்த அளவுக்கென்றால் ஏனைய நாட்களில் சாதாரணமாக பணத்துடன் சென்றால் நகை வாங்கிவிடலாம். ஆனால் இன்று முன்கூட்டியே டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே நகை வாங்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு சில பெரிய நகைக்கடைக் காரார்கள் டோக்கன் சிஸ்டம் கொண்டுவரும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்மையில் இது தெளிவான ஒரு மூடநம்பிக்கை என்று பல்வேறு காலகட்டங்களில் சிந்தனையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டாலும் மக்கள் தெளிவடைய மறுக்கிறார்கள். கீழ் வரும் இந்த செய்தியை படித்த பின்பாவது தெளிவடைவார்களா என்று பார்ப்போம்.

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கவுசல்யா என்ற இல்லத்தரசி அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கி, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவத்தை கூறியதாக தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள செய்தி;

'' எல்லோரும் சொல்கிறார்களே என்று, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று, நானும் என் கணவரும் ஒரு நகைக்கடைக்குச் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்று தங்க நாணயம் ஒன்றை வாங்கினோம். ஒரு வருடம் கடந்துவிட்டது.

இன்னும் ஓரிரு மாதத்தில் எங்கள் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடக்க உள்ளது. பேத்திக்கு தங்கத்தில் நகை செய்யலாம் என்று கருதி, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று வாங்கிய தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு, பொற்கொல்லர் ஒருவரிடம் சென்றோம். தங்க நாணயத்தை எங்களிடம் இருந்து வாங்கிய பொற்கொல்லர், நாணயத்தை மேலும் கீழும் திருப்பித் திருப்பி பார்த்தார்.

'' ஏம்மா, அட்சய திருதியை நாளில் வாங்கிய நாணயமா? என்று ஒருவித இளப்பமான தோரணையில் கேட்டுவிட்டு, மாற்று ரொம்ப கம்மியா இருக்கிறது அம்மா! ' என்று சொன்னார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. இனிமேல், 'அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதைவிட வேறு ஒரு நாளில் வாங்கினால் நல்லது' என்று உறுதிமேற்கொண்டேன். '
இவ்வாறு இல்லத்தரசி கவுசல்யா கூறினார்.
மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம்
என்ன பந்தயம் என்று கேட்பார்களா?
நன்றி-"TAMIL MUSLIM POLITICS"



தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு போயாச்சு அப்பாடி நிம்மதி அடுத்த தீபாவளி வரைக்கு தி நகர் அல்லது உங்கள் அருகில் உள்ள நகை கடைக்கு போகும் வேலை இல்லை அடுத்து ஸ்கூல் ஃபீஸ், யூனிஃபார்ம் லொட்டு லொசுக்குன்னு செலவு தானே அதுக்குள்ளே கோடை விடுமுறைக்கு குளு குளு ஸ்தலம் போலாம்னு அய்யாமார்கள் நினைக்கும் போது வீட்டில் உள்ள அன்னபூரணிக்கள் "அக்ஷ்ய திருத்திகை" எனும் மாடர்ன் காஸ்ட்லியான பண்டிகைக்கு ஒரு பொட்டு தங்கமாவது வாங்குனாதாங்க நம்ம டாப்பா இருப்போம்னு ஆரம்பிச்சு மினிமம் 4000 ரூவாய்ல இருந்து லட்சகணக்கில் ஹஸ்பன்ட் சேவிங்க்ஸை பங்க்ச்ர் ஆன டியூப் போல ஆக்கிவிடுவார்கள். இதில் பெரிய பீத்தல் வேற நாங்க பொம்பளைங்க கட்டும் சட்டுமா குடும்பம் நடத்தி இப்படி நாலு தங்க பொருளை வாங்கி வச்சாதான் ஆத்திர அவசரத்திற்க்கு உதவுதுன்னு வேற...... அந்த காலத்தில ஒரு லிட்டர் பாலுக்கு பதிலா அரை முக்கால்னு வாங்கி பால் கவர் போட்டு, பழை பேப்பர் வயர் கூடை ஸ்வெட்டர் எம்ப்ராய்டிரினு வீட்ல சும்மா இருக்கிற நேரத்தில் போட்டு நாலு காசை எட்டா சுருட்டி ஒவ்வொரு டப்பாவுல கையவிட்டு அம்மாக்கள் எடுத்து தந்த காலம் போய் நான் சொன்ன எந்த ஒரு விஷயத்தையும் செய்யாம சீரியல் பாத்தே நேரத்தை போக்கிட்டு புரட்சி போராட்டம்னு தி நகர்ல 75 கோடி பெருமானமுள்ள வீட்ல ஓனர் சின்ன சிவாஜி சொன்னா தப்பா இருக்காதுன்னு தங்கம் வாங்க தமிழகத்தில ஒரு அஃபிசியல் நாள் கிடைச்சாசுனு அன்னைக்கு போய் ஏமாறாதீங்க. ஏற்கனவே நோட்ஸ் போட்டு அது பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு இருந்தாலும் இதோ இன்னும் ரெண்டு நாள்ல அந்த அக்ஷய திருத்திகை வருதுன்னு கிளம்பிருவீங்களேன்னு தான் ஒரு அட்வான்ஸ் தங்க டாப் 10..........

1. எந்த பெரிய கடையிலேயும் தங்க காயின் வாங்கும்போது கேளுங்க சார் இதை திருப்பி கொடுத்தா அன்னையை விலையில எடுத்துப்பீங்களான்னு - ஒரு நல்லவர் கூட சொல்ல மாட்டாரு நாங்க வாங்கிப்போம்னு ( அதனால சும்மா வெட்டியா 4000 காசை கரியாக்காதீங்க)

2. நீங்க அவசரமா சேட்டு கடையாகட்டும், சேட்டன் கடையாகட்டும் நகையை விக்க அல்லது அடகு வைக்க போகும் போது தேங்கா சட்னி அரைக்கிற மாதிரி தேச்சி தேச்சி பார்த்திட்டு நம்ம மூஞ்சியை வேறு என்னமோ சம்பல் கொள்ளை நம்ம அடிச்ச மாதிரி பார்த்து பார்த்து அவன் கருங்கல்லை தங்க கல்லா மாத்திதான் யோசிப்பான் வாங்கலாமா அல்லது அடகு வைக்கலாம்ன்னு - ஆனா நம்ம மக்கள் ஒரு நாளாவது அந்த தங்கத்தை உரசி காட்டுங்கன்னு கேட்டிருக்கிங்களா?

3. நம்ம எண்ணம் எல்லாம் லட்சத்திற்க்கு நகையை வாங்கிட்டு பத்து ரூவா பெறுமானமுள்ள பிளாஸ்டிக் அல்லது சணல் பையை ஒன்னுக்கு ரெண்டு கேட்டு வாங்கிடம்னுதான் எண்ணம் - ஆமாவா இல்லையா

4. நாங்க வழக்கமா வாங்குற கடையில கேரட் மீட்டர், பீட்ரூட் மீட்டர் இருக்கு டக்குனு காட்டிடும்னு பல அப்பாவி புருசஷன்களை நம்ப வைக்காதீங்க இருவது ரூவாய்க்கு ஒரு கிலோ வெண்டைக்காயை ஒடிச்சு பாத்து வாங்கும் உங்க திறமை இதில காட்டுங்க.BIS Hallmark Certificate இருக்கன்னு பாருங்க அதுல நீங்க வாங்கற 85% தங்க காசுல இருக்காது அப்படி இல்லாம வாங்குற காய்ன் டேபிள் ஆடுனா அதுக்கு கூட முட்டுக்கு வைக்க லாய்க்கு இல்லை.

5. அப்படி வாங்கித்தான் தீருவேன்னு நினைச்சு என் பேச்சை நானே கேக்கமாட்டேன்னு சொல்ற ஆளா இருந்தா - அட்லீஸ்ட் போஸ்ட் ஆஃபிஸ்ல போய் வாங்குங்க கொஞ்சம் காஸ்ட்லி ஆனா 99.5 - 99.99 பியூரிட்டியுடன் கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கிற ரிலையன்ஸ் கோல்ட் காயின் வெரைட்டியை தவிர்க்கவும்.

6. நிறைய பேர் எளிதில் பிரிக்க முடியாத டஃப் பிளாஸ்டிக் மோல்டிங் போட்ட கோல்ட் காயின் தருவார்கள் அதை பிரிக்காமல் அப்படியே வைத்தால் அடுத்த வருஷம் அதுக்கு பேரிச்சம்பழம் கொட்டை கூட தர மாட்டாங்க பிரிச்சி பாருங்க உங்க ஆல்பர்ட் அயின்ஸ்டீன் மூளையை உபயோகிச்சு பரிசோதீங்க.....

7. பஜன்லால் சேட்டு கடையில் இருந்து பல்லாவரம் கோவாப்ரேட்டிவ் வங்கியில் கூட தங்க காயினுக்கு அடுகு ஸ்டேட்டஸ் "நஹி நஹி" தான் சில பேர் சொல்றாங்க ஸ்டேட் பேங்க்ல மட்டும் பிக்ஸட் டிபாஸிட் இருந்தால் எடுக்கிறாங்களாம் அது நம்ம காசை வாங்கி நம்மளுக்கே கடன் கொடுக்கும் கதை தான்.....

8. 4000 மினிமம் பச்சா நம்ம வீட்டு பாச்சாக்கு செலவு வெச்சே ஆவனும்னு நினைச்சா தயவு செய்து ஆன்லைன் கோல்ட் பன்டில் (பண்டு) மியூச்சவல் பண்டில் போடுங்கள் அல்லது எல் ஐ சி போன்ற இன்ஸூரன்ஸுல் போட்டால் குழந்தைகளின் பியூச்சருக்கு சோறு கியாரண்டி

9. தங்க பிஸ்கோத்து, தங்க கட்டி, தங்க கலசம், இதெல்லாம் அசோகன் வில்லனா நடிக்கும் படங்களில் வேணால் நல்லாயிருக்கும் நம்ம காலத்துக்கு தங்க காயின் யூஸ்ஃபுல் இல்லை, இப்ப இருக்கிற காலத்தில பொரம்போக்கு லேன்ட் வாங்கினா தங்க காயின், ஆயிரம் ரூவா மொபைல் போன் வாங்கினா தங்க காயின், டீவி வாங்கினா தங்க காயின், கொஞ்சம் நாள்ல கட்டண கழிப்பிடத்தில மலம் கழிச்சீங்கன்னா தங்க காயின்னு போடப்போரான் பாருங்க

10. ஒன்னு சாமி முன்னாடி அல்லது பீரோ உள்ளே உள்ள சேஃப்டி லாக்கர்ல வைக்கும் ஒரு சமாச்சாரத்தை நல்லதா நகையா அல்லது தங்கத்தை ஆச்சாரிகிட்ட சொல்லி (எங்கூர்ல தங்கம் உருக்குதல்னு ஒரு நிகழ்ச்சி கல்யானத்திற்க்கு முன் நடக்கும்) அதை வைத்து தான் கல்யானத்திற்க்கு தேவையான நகை தாலி போன்றவற்றை செய்வாங்க இன்னைக்கு அப்படியே ஜொலிக்கும் இப்ப வாங்குற நகைகள் பாலீஸ் போட்டே பாதி காசு காலி அதனால் நல்ல தங்கத்தை வாங்குங்க இல்லைனா அது வரைக்கும் வெயிட் பண்ணி நல்ல பொருளை வாங்குங்கள், நிறைய பேர் பெரிய கடைக்கு போக கஷடபட்டு பக்கத்துல இருக்கிற டுபாக்கூர் சேட்டுகளிடம் வாங்கி கடைசில அது நெத்தி காசுக்கு கூட லாயக்கில்லைனு தெரியும் போது வெளிய சொல்ல கூச்ச படுறாங்க அதனால் ஒரு கிராம் வாங்குனாலும் நல்ல கடையில் அல்லது போஸ்ட் ஆப்பீஸ்ல போய் வாங்குங்க தாய்க்குலங்களே......

கடைசி டிப்ஸ் - ஏற்கனவே பல படத்தில வந்த ஜோக்கு பீஸா ஆர்டர் பண்ணினா கூட 45 நிமஷத்தில வரான் ஆனால் ஆம்புலன்ஸ் வர 2 மணி நேரம் ஆகுதுன்னு, இப்ப ஜிவல்ஸ்னெக்ஸ்ட்.காம் கம்பெனியில போன் போட்டு ஆர்டர் பண்ணினா தங்கத்தை 30 நிமிஷத்தில ஹோம் டெலிவரி பன்றாங்களாம் என்ன கொடுமைடா...... யாரா இருந்தாலும் நான் போட்ட பத்து பாயின்ட்ஸை கேளுங்க 4000 சும்மா இல்லை பெரிய பணம் இன்னைக்கு - உங்களுக்கு என்று ஒன்று இருந்தால் அதை யாராலும் உங்களுக்கு கிடைப்பதை தடுக்கமுடியாது, உங்களுக்கு என்று இல்லாத பொருளை அந்த இறைவன் நினைத்தாலும் கொடுக்க முடியாது. தயவு செய்து பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் நிறைய அண்ணபூரணிகளுக்கு இந்த அவேர்னஸ் தேவை......... ஹேவ் ஏ ஹாப்பி அக்ஷய திருத்திகை
நன்றிRavi Nag



23 April 2012

கும்பகோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு ..


கும்பகோணம் நேற்று காலை நாகர்கோவில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து அரிசி ஏற்ற கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில்இணைப்பு பாதையிலிருந்து சரக்கு கையாளும் இடத்திற்கு ரெயில் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக ரெயில் இன்ஜினை பின்னோக்கி ஏற்றும் போது இருப்புப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளையும், இரயில்வே சிக்னலையும் கவனிக்காமல் இயக்கயதால் இரயில் பாதையில் இருந்து தடுப்புக் கட்டைகளை தாண்டி 100 மீட்டர் தரையில இறங்கி நின்றது. எதிரில் செக்காங்கண்ணி பகுதி மக்கள் வசிப்பிடங்களும் கார் மெக்கானிக் செட்டும் இருக்கிறது. அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில் இன்ஜின் டிரைவர் பார்த்திபன் என்பவர் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து கும்பகோணம் ரெயில் நிலையம் வரை ஓட்டி வந்தார். இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாரும், கும்பகோணம் காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலேயே இதுவரை இது மாதரி தடம் புரண்ட சம்பவம் இல்லை. ஆதலால் இந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதற்கு மக்கள் பரபரப்பாக கூடினார்கள். திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த கும்பகோணம் ரெயில் நிலையம் என்பதால் திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தப்பிச் சென்ற ரெயில் டிரைவரை தேடி வருகிறார்கள் மற்றும் சம்பவம் நடந்த பகுதியல் செக்காங்கண்ணி ரெயில்வே கேட் கீப்பரிடம் திருச்சி உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடததினார்கள்.
சம்பந்தபட்ட ஓட்டுனர் பார்த்திபன் மீது ரெயில்வேகாவல்
அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.
நன்றி-தினபூமி
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மீண்டும் மூடல் ...

கும்பகோணம்: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி இறந்ததையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் மூடப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவக்கல்லூரி தொற்றுநோய் பிரிவு நிபுணர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து சில மாதிரிகளை எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுநோய் கிருமி பரவியுள்ளதால், இங்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டாம் என பரிந்துரை செய்தனர். அதனால் கடந்த 4 மாதமாக இங்கு அறுவைசிகிச்சை நடைபெறவில்லை. தமிழக அரசின் மருத்துவத் துறை இயக்குனர் உத்தரவின்பேரில், குடந்தை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் உடனடியாக பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கடந்த 5 ம் தேதி முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விரைவீக்க அறுவை சிகிச்சைக்காக கும்பகோணம்
அடுத்த கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40), வில்லியவரம்பல் கிராம த்தை சேர்ந்த கருணாகரன் (30) ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் கடந்த 16 ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. அன்று மாலையே இருவருக்கும் காய்ச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த20 ம் தேதி பாலசுப்ரமணியன் இறந்தார். கருணாகரனுக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட் டது. இந்த குழுவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் கும்பகோ ணம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் மூடப்பட் டது.
நன்றி-தினகரன்

13 April 2012

கணவரை ‘கைக்குள்’ வைப்பது எப்படி?



உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? ‘ஆமாம், ஆமாம்’ என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது.
கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா..
காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார்.
கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.
கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.
என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.
கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.
கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீர்கள். அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் புகழ் பாடுங்கள். உங்களவருக்கு உங்கள் மீது கிரேஸ் கூடும்.
கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

மேலும் படிக்க Link கிலிக் செய்யவும்................... 

அப்பட்டமான உண்மை...கூற தைரியம் வேண்டும்.

சினிமா பற்றியும், MGRறை சுட்டதை பற்றியும் , MR ராதாகூறியது .
                                                இஸ்லாமியர் பற்றி  MR ராதாகூறியது .