RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

25 April 2012

சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று குறிப்பிடவும்.



தமிழகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் ஆகிய 2 பேரும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணக்கெடுப்பின் போது குடும்ப தலைவர், தொழில், ஜாதி, மதம், வீடு, வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 20 வகையான கேள்விகளை வீட்டின் உரிமையாளரிடம் கணக்கெடுப்பாளர் கேட்பார். அந்த கேள்விகளுக்கான பதிலை அருகில் அமர்ந்து இருக்கும் புள்ளி விவர பதிவாளர் தன்னிடம் உள்ள மினி லேப்டாப்பில் பதிவு செய்து கொள்வார்.
தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் 'இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவிசெய்வது நல்லது.
முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம் 'என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும்.
வெளிநாடுகளில் வேலை செய்கின்ற நமது ஊர் நண்பர்கள் இந்தசெய்தியை
தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்கவும்
சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 'இஸ்லாம்' என்று
குறிப்பிடவும்.

No comments: