RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

29 January 2012

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம்
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது?

இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது.

2 வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு?

அ. கேஸ் பொருத்தப்பட்ட (எல்பிஜி) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.21 இலட்சம்

ஆ சரக்கு (கேரியர்) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.28 இலட்சம்

இ பிற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ. 1 இலட்சம் இக்கடன் தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும் மீதமுள்ள 5 விழுக்காடு தொகையைப் பயனாளி ஏற்க வேண்டும்

3. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

அ. மேற்குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆ. ஆட்டோ ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (உரிமம்) வைத்திருக்க வேண்டும்.

இ. ரூ. 800 / - அல்லது ரூ. 1000 / - தொகையை பங்கு மூலதனமாக ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

ஈ. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) வங்கியில் வைப்பு நிதியாக (நிலையான வைப்பு) ரூ. 5000 / - செலுத்த வேண்டும். (இதற்கு வட்டி தரப்படும்). முற்றும் தொடர் வைப்பு நிதியாக (தொடர் வைப்பு) பிரதி மாதம் ரூ. 500 / - நான்கு வருட காலத்திற்குச் செலுத்த வேண்டும்.

4. கடனுதவி பெற வருமான உச்ச வரம்பு உண்டா?

ஆம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், நகர்புறம் எனில் ரூ. 54.500 / - க்கு மிகாமலும், கிராமப் புறம் எனில் ரூ. 39.500 / - க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

5. இத்திட்டத்தின் கீழ் டாம்கோ நிறுவனம் வழங்கும் கடனை விட ஆட்டோ விலை அதிகமிருப்பின் என்ன செய்வது?

மீதமுள்ள கடன் தொகையை ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கம் அல்லது தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) ஆகியவற்றிலிருந்து பெறலாம்.

6. கடன் தொகையில் பயனாளி எத்தனை விழுக்காடு பங்கு தொகை அளிக்க வேண்டும்?

வழங்கப்படும் கடன் தொகையில் பயனாளி 5 விழுக்காடு அவருடைய பங்கு தொகையாக அளிக்க வேண்டும். மீதமுள்ள 95 விழுக்காடு கடன் தொகை டாம்கோ நிறுவனத்தினரால் வழங்கப்படும்.

7. கடனுதவி பெறுவதற்கு பிணையம் (ச்யுரிட்டி) ஏதும் தர வேண்டுமா?

ஆம். பயனாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் பிணையம் மற்றும் ரூ. 5000 / - வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

8. கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கான ஆண்டு வட்டி 6 விழுக்காடு மட்டுமே ஆகும்.

9. கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனை 4 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

10. கடன் எவ்வாறு திரும்ப வசூலிக்கப்படுகின்றது?

ஆட்டோ தொழிற் கூட்டுறவுச் சங்கம் பயனாளியிடமிருந்து பிரதி மாத தவணை தொகையை வசூலித்து தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாட்கோ) வங்கிக்கு செலுத்தும். தவணை தவறினால் பயனாளி தாய்கோ வங்கிக்கு செலுத்திய வைப்பு நிதியிலிருந்து ஈடுகட்டப்படும்.
நன்றி: நர்கிஸ்
ஜனவரி 2012

முல்லைப்பெரியாறு - துரோகங்களின் தொடர்ச்சி:சில வரலாற்றுக் குறிப்புக்கள்



Picture of Madras Presidency
thanks to Edgar Thurston from Wikimedia Commons and Ookaboo!

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் திடீர் என தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதை போல இன்று நடந்து கொள்கிறது. ஆனால்மலையாளிகளும், மலையாள அரசில்யல்வாதிகளும் கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக மிகப்பெரிய துரோக வரலாற்றை படிப்படியாக செய்து வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் முதல்பெரும் வரலாற்று தவறு அணை கட்டி முடிக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட போதே தொடங்குகிறது.
1895 அக்டோபர் 10 ம் தேதி அணை திறக்கப்பட்டது. தமிழகத்தில் மலை மறைவு பகுதிகளாக இருந்த இன்றைய தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நம்பிக்கையின் கீற்று விதைக்கப்பட்டது. அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட திருவாங்கூர் அரசின் எல்லை பெரியாறு அணை கட்டிய இடத்திலிருந்து 62 கி. மீ தொலைவில் உள்ள அடூர் கிராமத்தில் முடிகிறது. சமஸ்தானத்தின் எல்லைக்குள் இந்த அணை இருப்பதாகக் கற்பனை செய்து இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. அணைவிரகாரத்தில் நடந்த முதல் வரலாற்று தவறு இது.

இந்திய சுகந்திரத்திற்கு பிறகு 1956 ல் மொழிவாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. தமிழக, கேரள எல்லைப்பிரச்சனை உருவானது. பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் 90 சதம் தமிழர்கள் வசித்தனர். பெரியாறு அணை இந்த இரு தாலுகாக்களில்தான் இருக்கிறது. எந்த மொழி பேசும் மக்கள் ஒரு பகுதியில் அதிகம் வசிக்கிறார்களோ அந்த பகுதியியை சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் சேர்ப்பதுதான் விதி. ஆனால் அப்போழுதே பெரியாறு அணையைக் கருத்தில் கொண்டு இந்த இரு தாலுகாக்களையும் விட்டுத்தர மறுத்தது கேரளம். பீர்மேடு, தேவிகுளம் இல்லாத கேரளம் தலையில்லாத முண்டம் போலாகிவிடும் என இந்தியாவின் அன்றைய பிரதமர் நேரு கேரளாவுக்கு வக்காலத்து வாங்கினார். அதற்கு வாய்மூடிப் பணிந்து போனார் காமராஜர்.
அடுத்து 1976 ஆம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. அதன் உயரம் 555 அடி, அதன் நீர்த்தேக்கப் பரப்பு 16,000 ஏக்கர், பெரியாறு அணையைப்போல 7 மடங்கு பெரியது. இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து இது வரை முழுமையாக நீர் நிரப்பப்பப் படவேயில்லை. அதிலிருந்து 8000 மேகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவர்களின் எந்திரங்கள் தூசுபடிந்தன. அதனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து அந்த நீரை அப்படியே இடுக்கிக்கு எடுத்து வந்தால் அணை ஒரளவு நிறையும் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது கேரள அரசின் அன்றைய திட்டம்.
அந்த வேளையில் கேரளத்தின் முக்கிய ஊடகமான மலையாள மனோரமா இரண்டு மாதங்களில் அணை உடையப்போவதாக செய்து வெளியிட்டது. பீர்மேடு எம்.எல்.ஏ. அணை பலவீனமாகிவிட்டதாக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது எம்.கே. பரமேஸ்வரன் நாயர் வெளிப்படையாகவே கூறினார், நம் சகோதரர் எம்.ஜி. ஆரிடம் சொன்னால் உடன் அணையின் நீர்மட்டத்தை குறைத்துவிடுவார் என்று.
இந்த திட்டத்தின் படி 25.11.1979 ல் தமிழக, கேரள அதிகாரிகள் அமைச்சர்கள் அளவில் திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டவர்களில் முதல்வர் எம்.ஜி. ஆரிலிருந்து, அன்றைய மதுரை மாவட்ட கலெக்டர் மக்கரா வரை அணைவரும் மலையாளிகள், பேச்சுவாத்தை மலையாளத்திலேயே நடைபெற்றதாம். இந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரு தமிழர் பொதுபணித்துறை அமைச்சர் ராஜாமுகமது மட்டுமே, அவர் தமிழர்களுக்கு எதிரான அணை நீர்மட்டத்தை குறைப்பதை கண்டித்து பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆனாலும் எம்.ஜி. ஆர் தலைமையிலான மலையாளிகள் குழு அணை நீர்மட்டத்தை 136 அடியாக குறைப்பது, அணையை பலப்படுத்தியதும் மீண்டும் பழைய நிலைக்கே உயர்த்தலாம் என ஒப்பந்தம் செய்து கொண்டது. அணை பலமுறை பலப்படுத்தபட்டும் இது வரை நீர்மட்ட உயரம், அன்று குறைக்கப்பட்ட 136 அடியில் தான் உள்ளது.

1954 ல் ராஜபாளையத்தில் தமிழக வனத்தறை, செண்பகவல்லி அணையைக் கட்டியது. இடுக்கி அணைக்குத் தண்ணீர் இல்லை என்பதால் கேரள வனத்தறையினர் 1981 ல் தமிழகத்திற்குள் நுழைந்து செண்பகவல்லி அணையைத் தகர்த்து எறிந்தனர். உடைத்தவர்களிடமே தமிழக அரசு ரூ .5 லட்சத்தை வழங்கிக் கட்டித்தரும்படி மன்றாடியது. இன்று வரை அணை கட்டப்படவில்லை.

இவை போக இதுவரை கேரள ஊடகங்களும், அரசியில்வாதிகளும் அவிழ்த்துவிட்ட பொய்கள் ஏராளம் ....

1980 களில் அணையில் யாணைஅளவுக்கு ஒட்டை இருக்கிறது என்றார்கள்.

அணையின் நீர்த்தேக்கத்தை உயர்த்தினால் யாணை, புலிகள், மான்கள் நீர்குடிக்க இயலாது என்றார்கள்.

அணை உடைந்தால் கேரளவில் 5 மாவட்டங்கள் இல்லாமல் போகும் எனும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், கேரளாவின் வரைபடத்தில் 5 மாவட்டங்களை நீக்கி இணையத்தில் வரைபடத்தை வெளியிட்டார்கள்.

8 ஆண்டுகள் நடந்த கடும் நீதிமன்ற வழக்கிகளுக்குப் பின் 27.2.2006 ல் இந்திய உச்சநீதமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது. பெரியாறுஅணை முழுபலத்துடன் இருப்பதால் மீண்டும் 142 அடி வரை தமிழகம் அதில் தண்ணீரைத் தேக்கலாம் என்பதே அந்த தீர்பின் சாரம். அந்த தீர்ப்பு வெளிவந்த 10 நாட்களில் கேரள அரசு உடனே கேரளத்தில் உள்ள மிக ஆபத்தான அணைகள் தொடர்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

தீர்ப்பு வெளியாகி கடந்த ஆறு ஆண்டுகளாகியும் தீர்ப்பை நிறைவேற்ற வைக்கும் எந்த முயற்சியையும் தமிழக அரசும், அதன் ஆட்சியாளர்களும் செய்யவில்லை என்பது மிக பெரிய கூத்து. குறைந்தபட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட போடவில்லை. மேலும் 2009 ல் தமிக அரசு ஏன் மீண்டும் கேரளா போட்ட வழக்கிற்கு ஒப்புதல் அளித்தது என்பது போன்ற கேள்விகள், தமிழர்களை மலையாளிகள் மட்டுமல்ல தமிழர்களும் ஏமாற்றுகிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.

இன்றைக்கு கேரளத்தின் உணவுத்தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்பவர்கள் தமிழர்களே. உணவு மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் மலையாள மொழியின் எழுத்தும், தமிழின் மூத்த எழுத்துவடிவமான வட்டெழுத்தாகும், அவர்கள் பேசுகிற மொழி கொடுந்தமிழ் என்று சொல்லப்படுகிற தமிழின் பழைமையான பேச்சு வடிவம், இன்றைய கேரளமே பண்டைய தமிழகத்தின் சேரநாடு, இப்படி எல்லாவிதத்திலும் தமிழகத்திலிருந்து எடுத்துக்கொண்ட மலையாளிகள், அடுத்தவனைக்கெடுத்த தான் வாழ நினைக்காத தமிழரின் பரந்த மனப்பாண்மையையும் எடுத்துக்கொள்ளவில்லையே.
"இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுவை தான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திடவேண்டும். இதை தள்ளிவைப்பதோ, தவிர்பதற்கோ இடம் இல்லை, ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவது இல்லை .." முல்லைபெரியாறு அணை கட்டும் போது ஏற்பட்ட துன்ப, துயரங்களின் போது, அந்த அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் டைரிக்குறிப்பில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. இதனை மலையாளிகளுக்கு யாரேனும் மொழிபெயர்த்துச் சொன்னால், புரிந்து கொள்வார்களா ..?





27 January 2012

அல்ஹாஜ் பழனி பாபா

1997 ஜனவரி 28 வெற்றிக்கும் வீரமரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதனின் நினைவு நாள். சகோதரா! வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது நீயாக இரு! நான் வெட்டப்பட்டாலும் இறைப்பாதையில் கொல்லப்பட்டாலும் உன் சமுதாய பனி தொடரட்டும். நான் உங்களோடு இல்லை என்றாலும் அல்லாஹ் உங்களோடு இருக்கிறான். - அல்ஹாஜ் பழனி பாபா
இன்று (28.01.2011) சமுதாயப்போராளி பழனிபாபா அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிடுவதில் பழனிபாபா இணையதளம் பெருமையடைகிறது
அஹமது அலி
அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் "பாபா" என்று அறிமுகப்படுத்துவார். அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள் கேட்கும்போதும், பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார். இவை இரண்டும் காலப்போக்கில் பழனிபாபா என்று உருமாறியது. மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தான் முதன்முதலில அஹமது அலியை பழனிபாபா என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தவர்
பழனிபாபா
பழனியிலிருந்து 4 கி. மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது. புது ஆயக்குடி. இக்கிராமமே பழனிபாபாவின் தாய்வழிப் பூர்வீக ஊர். தந்தையின் ஊர், நீலகிரி மாவட்டம் குன்னூர். தந்தை பெயர் VM முஹம்மது அலி தாயார் பெயர் கதீஜா பீவி (குன்னூரில் பழனிபாபாவின் அப்பாவை காப்பி கொட்டை ராவுத்தர் என்று அழைப்பார்கள்). பழனிபாபா பெற்றொருக்கு இரண்டாவது குழந்தையாக 14/11/1950 ல் பிறந்தார். அஸ்ரப் அலி, லியாகத் அலி, முபாரக் அலி ஆகிய சகோதரர்களும் ரெஜினா சுல்தான், ரூபினா சுல்தான், ஜரினா சுல்தான் ஆகிய 3 சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். மிகவும் அன்பான, நேசமான, பொருளாதார நிலையில் வசதியாக இருந்த குடும்பம்.
ஆரம்பக் கல்வி
பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பழனிபாபா குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி. ஒ (இடோ) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
பட்டப்படிப்பு
பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.
படிப்பில் பிடிப்பு, ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக் கூர்மை உடைய பாபா அவைகளையே தனது ஆயுதமாக பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
பொது வாழ்க்கை
நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையென, புயலென, அழகான அற்புதமான புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது. பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம். திட்டச்சேரியில் 07/12/1996 அன்று நடைபெற்றப் பொதுக்கூட்டமாகும்.
தனது துணிச்சலான பொது வாழ்க்கை நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் குடும்ப வாழ்க்கையையும், பந்த பாசப்பினைப்பினைபுகளையும் விட்டுவிலகி வாழ்ந்து வந்தார். அவரது 30 ஆண்டுக்கால வாழ்க்கை அவரைப் புரிந்து கொண்டவர்களுடனும், நண்பர்களுடனுமே இருந்தது. தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார். தனக்கென ஒரு இல்லற வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அது பற்றி தன் நண்பர்களுடன் பேசும் போது "பொது வாழ்க்கை, பிரச்சாரம் என்று ஊர் ஊராக திரியரவன் கல்யாணத்தை வேறப் பண்ணிக்கிட்டு ஒரு பெண்னுடைய வாழ்க்கையையும் நிம்மதியில்லாமல் ஆக்கனுமா?" என்று கூறுவார்.
ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி. ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. "யார் இந்த பழனிபாபா?" என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் போட்ட தடை ஆணையில், "தாடி வைத்த, நடுத்தர வயதுடைய, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க அலுவலத்துக்குள் நுழைய தடை" என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார் பாபா. தடைஆணைக்கே தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா ஒருவர் தான். இவ்வாறே தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத சூழ்நிலையை இந்தியாவில் ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், 'பழனிபாபா பொது கூட்டங்களில் பேசக்கூடாது' எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து, மைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட பேசுறதும், உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான்" என்று காமண்ட் அடித்தார்.
இந்து பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார்.
இந்துத் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு ஆங்கிலத்தில் அரசியல் நிர்ணயச்சட்டம்; வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக் கவர்ந்தன.
பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள் .. அடிக்கடி கைது செய்தது பழனிபாபாவை ஒரு "தீவிரவாதி" யாகக் காட்டவே தவிர, அவர் ஓரு குற்றவாளி என்பதால் அல்ல. காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட தே இல்லை!
ஆனால், பழனிபாபாவை "தீவிரவாதி" யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன பத்திரிக்கைகளும், காவல்துறையும் வெற்றி பெற்றது. வாக்குரிமையை முறையாக பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்து, நீதிமன்றனகளை, சமுதாய எழுச்சிக்காக முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.
நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, தனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான். பழனிபாபாவால் இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது. இல்லையெனில், பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும்.
பல நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில் இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும், இழப்புக்கு மேல் இழப்பு, இழிவுக்கு மேல் அழிவு என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும், பாபா தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார். இந்து பாஸிஸ பேச்சாளர்கள் பேசும் பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பழனிபாபாவின் ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.
வழக்குகள்
பழனிபாபா மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் ஜெயலலிதா (1991 - 1995). ஆட்சிக்காலத்தில் 1 முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார் மற்றொரு முறை ஜெயலலிதா (1991 - 1995). ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி நிரபராதி என விடுதையானார்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர். வெங்கட்ராமன், துனை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார். அதன்பின் "சென்னை உயர்நீதிமன்றம்" தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.
எழுத்துப்பணி
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்து? என்ற இராம. கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார். மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை கைது செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையை நீக்க ஆணை பெற்றார். கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ பாதிரிமார்களோடு இவர் நடத்திய விவாதம், பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு கிறிஸ்துவத்திலும் (பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான் பாபர் மசூதி பிரச்சினையில் சட்டத்தை யார்? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார்.
பாபா நடத்திய "அல்முஜாஹித்", "முக்குல முரசு", "புனிதப்போராளி", ஆகிய பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள், நூல்கள், மேடைபேச்சு, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு, இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.
வெளிநாட்டு பயணம்
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.
1988 ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர். புருனே நாட்டின் சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர் ..
இறுதிக் காலம்
கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.
ஊர் ஊராக சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில் வாழும் சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று "ஜிஹாத்" கமிட்டி மூலம் பல ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள் செய்து வந்தார்.
தடா கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து, அவர்களுக்கு மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம் (மணியாடர்) அனுப்பி உதவிவந்தார். இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450 -. க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை ஒருங்கிணைத்தார். அதேபோல இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா. இதனால் முஸ்லிம்களைப்போல் பிற சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. இந்த மூன்று சமூகங்களும் அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக இல்லாமல், ஆளப்படும் ஜாதி என்பதை கண்டுணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை புறாக்களோடும், இயற்கையோடும் கழித்தார்.
மறைவு
1997 ஜனவரி 28 ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன், ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும், முகத்திலுமாக 18 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார். இந்துத்துவாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். மறுநாள் 29 - ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (இடோ) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.
பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின் வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அல்ஹாஜ் பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர் எனலாம்.

நன்றி - பழனிபாபா


20 January 2012

கொரநாட்டு கருப்பூர் வாக்காளர்களின் பெயர் பட்டியல்.

 புதுபிக்கபட்ட நமதுஊர் வாக்காளர்களின் பெயர் பட்டியல்.
  இந்த சுட்டியில் உள்ளது. உங்கள்பார்வைக்கு,
 நமது ஊர்நண்பர்கள்சரிபார்த்து கொள்ளவும்.
1,முஸ்லிம்தெரு வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
2,பூம்புகார்சாலை வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
3,அம்மன்கோவில்தெரு வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
4,சென்னைசாலை வாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"
5,கீழதெரு - மேழதெருவாக்காளர் பெயர் பட்டியல் "சுட்டி"

நம்மதொகுதி எம்.எல்.ஏ,மின்னஞ்சல்முகவரி.

தமிழகஅரசு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கு தனித்தனி மின்னஞ்சல்முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது. உங்கள்குறைகளை நேரடியாக தெறியபடுத்த நம்மதொகுதி எம்.எல்.ஏ அவர்களின் மின்னஞ்சல்முகவரி."சுட்டி"
தகவல் அறியும் உரிமைச் சட்டம்" என்பது எந்த ஒரு பொதுத்துறைஅதிகாரியிடமிருந்தும் தகவல்அறியும்சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்வழிகாட்டி கையேடுதமிழில்"சுட்டி"
நமது குறைகளை நேரடியாக நம்மாவட்ட கலக்டரிடம் 
புகார்செய்ய"சுட்டி"
பொதுவாக வங்கியினாள் நமக்கு ஏதாவது குறையோ,பிரச்சனையோ ஏற்பட்டால்
மேலாளர்ரிடம் (எலுத்துபூர்வமாக)புகார்கூருவோம்.அங்கேயும் நமக்கு தீர்வு கிடைக்காவிட்டால்.கீழ்உள்ள
சுட்டியில் புகார் செய்வும்.நமக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்??
வங்கிக் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் பதிவுசெய்யும் படிவம்.
தமிழ் "சுட்டி" --ஆங்கிலம் "சுட்டி"

வங்கிக் குறைதீர்ப்பாளர்வலை தமிழ்.
அஞ்சலில்அனுப்ப.
திரு. எஸ். கணேஷ்
C/o இந்திய ரிசர்வ் வங்கி
போர்ட் க்ளேசிஸ்
சென்னை 600 001
தொ. எண் .25399170/25395964
ந.அ. (Fax) எண். 044-25395488
நமதுஊர் வங்கியின் முகவரி.
வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
முகவரி: 5/1237-1 MADINA தெரு, KORANATTU KARUPPUR, குறியீட்டு எண்: 612501
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
கிளை: KORANATTU KARUPPUR
தொடர்பு: 0435 2442395
IFSC குறியீடு: IOBA0001216


19 January 2012

நமக்கு வேண்டாம் இந்த இழிவு .

இஸ்லாமிய நண்பர்களே.
நம்இனதை அழிக்க நினைக்கும் கூட்டதில்இவர் சேர்ந்திருப்பதை பாருங்கள்,
இனியாவது நாம் இந்த நடிகருக்கு கொடிபிடிபது கட் அவூட்க்கு மாலை, பால் அபிசேகம், படத்தை பார்க்க பலநூறு ரூபாய்கள் செலவுஆகியவை நமக்கு தேவையா நண்பர்களே.
இவர்களை பொறுத்தவறை தன்இனத்துக்கும் மதத்துக்கும் மொழிக்கும் நேர்மையாக நடத்து கொள்கிறார்கள் நாம்தான் விட்டல்பூச்சியாய் உள்ளோம்.
இதுவரை இவர் முல்லை பெரியார், கூடகுலம், காவேரி நதி நீர், ஈழமக்கள் படுகொலை, தமிழக மீனவர்கள் படுகொலை எனஎல்லாத்தையும் வேடிக்கைபார்த்த கொண்டுதான் இருந்தார்.
இனியாவது நாம் சிந்திபோம். 
தமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி!
என்ற தலைப்பில் சகோதரி மலர் விழி எழுதிய கட்டுரை காண சுட்டி.
ரஜினி விரைவில் உடல் நலம் பெற வேண்டி இஸ்லாமிய
மதப்பிரார்த்தனையை காண சுட்டி
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், இந்து முன்னணி ராம. கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ 'உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய 'சோ', 'எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க., வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை பா. ஜக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய் கூட்டணி உருவானால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்''என்றார். இதில் சிலர் ரகசியமாக ரஜினியை முன்மொழிந்துள்ளனர்.
இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான ஆர். எஸ். எஸ். தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. ஒரு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் பிரவேசமான பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய பார்பனர்கள் முயற்சிப்பது என்னவோ சரி. ஆனால் அதில் ரஜினிகாந்த்க்கு என்ன வேலை என்பது புரியாத மர்மம்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகி ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களும், சாமியார்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடித்து அவர்களை வெளியே கொண்டு வரவும் அதே நேரம் தங்களது வர்ணாசிரம ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடியை தமிழகத்தில் காலூன்ற செய்யும் வேலையைத்தான் இவர்கள் சிரத்தையோடு செய்து வருகின்றனர். ஜெயலலிதா மற்றும் சோ, சுப்பிரமணிய சாமி, குரு மூர்த்தி, பாலசந்தர் இவர்கள் எல்லாம் யார் என்று நமக்கு தெரியும். அந்த கூட்டத்தில் ரஜினிகாந்தும் சேர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. தங்களது பயங்கரவாத முகம் வெளியே தெரிந்து விட்டதால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பிரதம வேட்பாளர் தேவைப்படுகிறது அது ஜெயலலிதாவாகவோ அல்லது ரஜினிகாந்தாகவோ இருக்கலாம்.
நன்றி-செய்திகருவு-Anbu Chelvan


நக்கீரன்நிர்வாகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் வழக்கை முடித்துவைத்தது

முதல்​அமைச்சர் ஜெயலலிதா பற்றிய  அவதூறான செய்தி வெளியிட்டதற்கு அட்டைப்படத்தில் செய்தி வெளியிட்டு நக்கீரன் நிபந்தனையற்ற  மன்னிப்பு கேட்டது. இதனால் வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம் இதுகுறித்த விபரம் வருமாறு:- கடந்த வாரம் வெளியான நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது. இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வார இதழ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வார இதழையும் எரித்து கைதாகினர். அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதனிடையே முதல்வர் ஜெயலலிதா தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:​ எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்தி வெளியிட இருந்தால் அந்த செய்தியை பேக்ஸ் மூலம் எனக்கு அனுப்பி வைத்து, அதுபற்றி விளக்கம் கேட்ட பின்னரே பிரசுரிக்க வேண்டும் என்று 2006​ல் சென்னை ஐகோர்ட்டு நக்கீரன் பத்திரிகைக்கு உத்தரவிட்டுள்ளது.   இந்த கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் நக்கீரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பொய்யானது. அவதூறானது என்று தெரிந்தே வேண்டும் என்று குற்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரோ, நானோ வாழ்நாளில் ஒருபொழுதும் மாட்டுக்கறி சாப்பிட்டது இல்லை. அந்த செய்தியை வெளியிட்டதன் மூலம் நக்கீரன் பத்திரிகை கோர்ட்டு உத்தரவை அவமதித்துள்ளது. இந்த செய்தி என் நற்பெயருக்கு மட்டுமல்ல, எனது மதிப்பு மரியாதைக்கு களங்கத்தை உருவாக்கி எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது.   பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த தமிழக முதல்​ அமைச்சர் மாட்டுக்கறி உண்பவார? என்ற தவறான எண்ணத்தை இந்த செய்தி உருவாக்கி உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் இந்த அவதூறு செய்தி உள்ளது. எனவே என்னைப் பற்றி செய்தி எழுத, வெளியிட, விற்பனை செய்ய நக்கீரன் பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் வேண்டும் என்றே அவமதித்ததற்காக நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரை nullநீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.   இந்த வழக்கு தலைமை nullநீதிபதி இக்பால், nullநீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நக்கீரன் தரப்பு வக்கீல் பி.டி. பெருமாள், முதல்வரைப் பற்றி வெளியான செய்தியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அதற்கான மன்னிப்பு அறிவிப்பை பத்திரிகையின் முக்கிய பகுதியில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். அதற்கு முதல்​அமைச்சர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவnullதகிருஷ்ணன், முதல்வரைப் பற்றி நக்கீரன் பத்திரிகை முதல் பக்கத்தில் தான் செய்தி வெளியிட்டது. எனவே மன்னிப்பையும் முதல் பக்கத்தில்தான் வெளியிடவேண்டும் என்று வாதிட்டார்.   இதையடுத்து தலைமை nullநீதிபதி, இந்த மன்னிப்பை வரும் நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட வேண்டும் என்றார். தலைமை நீதிபதி  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதை முதல் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.   இந்த உத்தரவை அடுத்த கடந்த இதழில் முதல் பக்கத்தில் மன்னிப்பு கோரி நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. நேற்றைய இதழில் முதல் பக்கத்தில் அட்டை படத்தில் மன்னிப்பு கோரியிருந்தது. இந்த இதழ்களை உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் மற்றும் டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் நக்கீரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
நன்றி- தினபூமி 

13 January 2012

சாதி மத வேறுபாடில்லாது அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்துகள்.


உழவர் பெருமக்கள்.
இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும்.
தமிழர் திருநாள்... பொங்கல் திருநாள்...
உழவர்கள் அறுவடை நாளை தமிழர் திருநாளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
தமிழனாய் இருப்போம் ...
தமிழை போற்றுவோம்...
ஒன்றுபடுவோம்......
நக்கீரன் விவகாரத்தின் போது தலைமை நீதிபதி இக்பால்அவர்கள் ''அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஜாதி, மதம் பார்க்கக் கூடாது. கட்சி பேதம் பார்க்கக் கூடாது. மரண தண்டனை கைதிகளுக்கு கூட குடிநீரும், மின்சாரமும் கடைசி வரை வழங்க வேண்டும்.என்றுநீதிஅரசர் கூறிஉள்ளார். 
ஆனால் இன்று தமிழ்நாட்டில் காவேரியால்தஞ்சை திருச்சியில் 
முப்போகம் விளைதபூமி இன்று வீட்டுமனையாக மாறுகிறது.
முல்லை பெரியார்ரால் தென்மாவட்டங்களில் குடிநீரும் 
கேள்விகுறியாய் உள்ளது.
தமிழர்கள்..
தமிழர் என்பவர்கள் ஒரு தேசிய இனம். தமிழர்களின் தாய் மொழி தமிழ். தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800 - களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 - ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950 - களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983 - இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வரலாறு….
தமிழர் தோற்றம் பற்றி மூன்று கருதுகோள்கள் உள்ளன. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது ஒரு கருதுகோள். இரண்டாவது, சற்று வேறுபட்டு ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்சநல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000 - ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500 - ஆம்ஆண்டைச் சேர்ந்தவையாகும்.

தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். பெளத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட அய்யனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது.
நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, (இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (அறியாமை), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
ன்றையதினத்தில் ன்று..... ஜனவரி 14

1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
1724 - ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1814 - நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1996 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.





11 January 2012

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்



[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. 
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் 
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக
உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.
கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. 
அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும் நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன். 
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)
ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.
நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
 எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.'' 
நன்றி- மடவளை நியூஸ்