RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

03 January 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அதிரைஎக்ஸ்பிரஸ் என்றதளத்தில் சகோதரர் சேக்கனா M நிஜாம் அவர்கள்எழுதிய,தகவல் அறியும் உரிமைச்சட்டதைபற்றி ஒரு கட்டுரை சமீபத்தில்படிக்கநேர்த்தது,இது மிகவும்பயனுள்ள தகவல்.இதை அனைவரும் தெரித்துவைத்துகொள்ள வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-வழிகாட்டி கையேடுதமிழில்

1. "தகவல் அறியும் உரிமைச் சட்டம்" என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?

எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான 'பசுமை வீடுகள் திட்டம்', இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் 'நமக்கு நாமே திட்டம்'), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

4. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

7. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

8. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?

9. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

10. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற: -

திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,

(வானவில் அருகில்) பழைய எண்: 273, புதிய எண்: 378, அண்ணா சாலை, (தபால் பெட்டி எண்: 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

மின்னஞ்சல்: mailto: sic@tn.nic.in இணையத்தளம்: http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற: -

ஸ்ரீ சத்யாநந்தா மிஸ்ரா

தலைமை தகவல் ஆணையர்

அறை No.306, இரண்டாம் தளம் ஆகஸ்ட் கிராந்தி பவன்

Bhikaji காமா பிளேஸ் புது தில்லி - 110 066.

தொலைபேசி: - 011 - 26717355

மின்னஞ்சல்: - s.mishra @ nic.in இணையத்தளம்: http://cic.gov.in/

குறிப்பு: மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

3 comments:

சேக்கனா M. நிஜாம் said...

சலாம் சகோ. பாட்சா அவர்களுக்கு,
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் !

விழிப்புணர்வை தூண்டும் விதமாக, தங்களின் வலைத்தளத்தில் என்னுடைய கட்டுரை “தகவல் அறியும் உரிமை சட்டத்தை “ பற்றி பதிந்து இதை அனைத்து சகோதரர்களிடமும் எத்தி வைத்ததற்கு..

தொடரட்டும் தங்களின் சமுக நல பணிகள்..............................

RMY பாட்சா said...

வஅலைக்கு முஸ்ஸலாம்.வரஹ்
வருகைக்கு நன்றி சகோ.

Live Saran said...

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எந்தெந்த துறைகளிடமிருந்து தகவலை பெறுவது? உதாரணமாக

1. கரூர் நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கு முன்பு முடிந்த வழக்கு ஒன்றின் தீர்ப்பு நகலை பெற யாருக்கு விண்ணப்பிப்பது, அவர்கள் தர மறுத்தால் மேல் முறையீடு யாரிடம் செய்வது?

2. வில்லங்கம் என்று சொல்லக்கூடிய சொத்து வில்லங்கங்களை அந்தந்த மாவட்ட பதிவு அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கலாமா? அவர்கள் தர மறுத்தால் மேல் முறையீடு யாரிடம் செய்வது?

3. வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பாக தகவல் உரிமை சட்டம் வாயிலாக மனு செய்தால் “ மனுதாரர் கோரிய தகவல் இவ்வலுவலகத்தில் இல்லை” என்று 30 நாட்கள் முடிவின் போது கூறுகிறார்களே? இத்தகவலை மனு கிடைத்த 30 நாட்களுக்குள் தெரியப்படுத்தவில்லையெனில் இச்சட்டப்படி நாம் மேல்முறையீடு செய்துவிடுவோம் என்ற பயத்தில் இப்படி செய்கிறார்கள், ஆகவே மேல்முறையீடு செய்த பிறகும் இதே தகவல் தான் தருகிறார்கள். எப்படி மீண்டும் முதல், இரண்டாம், மூன்றாம் அப்பீல் செய்வது அதை யாருக்கு செய்வது குறிப்பாக கரூர் மாவட்டத்தில் இப்படி அதிகமாக நடக்கிறது.

4. தாங்கள் எனக்கு உதவ வேண்டும், எந்தஎந்த துறைகளில் தவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறலாம்?
பதிவுதுறை, நீதித்துறை, பள்ளிகல்வித்துறை, வருவாய்துறை, மருத்துவதுறை, வேளாண்துறை, நகராட்சி துறை, இப்படி ஏணைய துறைகள் உள்ளது. இத்துறைகளில் யாருக்கு முதலில் மனு அனுப்புவது, பிறகு மேல்முரையீட்டாளர்கள் யாருக்கு மனு செய்வது?

5. மேலும் சில தகவல் உரிமைச்சட்டத்தின் படி எப்படி தகவல் பெறுவது என்பதை குறித்து தாங்கள் எனக்கு தெரியப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
சரன்.