RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

23 June 2012

தமிழனை ஏமாளியாக்கும் புதுதிட்டம்! காஸ் லைன் பதிப்பு திட்டம்.


நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (கெயில்) காஸ் லைன் பதிப்பு திட்டம்.

கேரளா - கொச்சியில் இருந்து கர்நாடக - பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன் & வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி / அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா??

ஏழு மாவட்ட (!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம், வீடு, ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! அது மட்டும் அல்ல விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா?

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு ..!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310 கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். (தமிழகம் வழியாக வந்தால் 470 கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 310 கிமீ) அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

மலையாளிகள் அவர்களது நிலத்தில் விட மாட்டார்கள். அதனால்தான் சுற்றி தமிழ் நாடு வழியாக கொண்டு போகின்றார்கள். தமிழ் நாட்டில் மட்டும் இத் திட்டத்தால் முப்பதாயிரம் ஏக்கர்கள் விவசாய நிலம் நேரடியாக பாதிக்கப்படும். அனைவரும் இதை எதிர்த்து போராட வேண்டும். இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் இப்படியாய் விட்டால் உழவனின் நிலைமை இன்னும் மோசம் ஆகும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். கோவையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் முதன் முதலாக எதிர்ப்பு குரல் கொடுக்கப்பட்டது ... அகவே தமிழக முதல்வர் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் ஏழு மாவட்டத்தின் ஆட்சியர்களை தொடர்புகொண்டு பேசியுள்ளார், மிகவிரைவில் ஓர் தீர்வினை எதிர்பார்க்கலாம் ..
இதில் கொடுமைஎன்னஎன்றாள் இந்த காஸ் லைன் போவது பெங்கலூருவுக்குதான் ... தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கும் எரிவாயு சப்ளை இதுவரை அறிவிக்கபடவே இல்லை ... அப்படியே தமிழ்நாட்டுக்கு பிற்காலத்தில் சப்ளை இருந்தாலும், இந்த பைப்பை நெடுஞ்சாலைகள் ஓரத்திலோ, ரயில் தட ஓரத்திலோ பதிக்கலாம். அதற்கும் உடன்பட மறுக்கிறார்கள். (தமிழர் என்ற இளக்காரமா) அப்படி கொண்டு சென்றால் யாரும் ஏதும் சொல்லபோவதில்லை. இந்த போராட்டதிற்கு இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

11 June 2012

தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள் !

ஆசிய நண்பன்: தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்!

சென்னை:தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன....இரண்டு சம்பவங்களின் பின்னணிக் குறித்து போலீசாரும் துருவிதுருவி விசாரணை நடத்தப் போவதில்லை. ஊடகங்களும் இதன் பின்னணி குறித்து தோண்டி துருவப்போவதில்லை. ஆனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்வதிலேயே இவர்கள் குறியாக இருப்பார்கள். முஸ்லிம் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இதுக்குறித்து என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள்?

02 June 2012

பெரியாறு அணையின் துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

தேனி: பெரியாறு அணையில், சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு ஏற்படுத்திய துளைகளை அடைக்க, தமிழக அரசு பயன்படுத்தும் தொழில் நுட்பம், கேரள அதிகாரிகளை வியப்படையச் செய்துள்ளது மற்றும் அங்கே இருக்கும் அரசியல் வாதிகளை வயிற்றெரிச்சலும் அடைய செய்து உள்ளது.பெரியாறு அணையில் ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு, 9 இடங்களில் துளைகளை போட்டது. ஒவ்வொன்றும், 140 முதல் 180 அடி ஆழத்தில் போடப்பட்டன. துளைகளை அடைக்க, முதலில் அனுமதி மறுத்த கேரளா, தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு அதில் இருந்த எச்சரிக்கைக்குகம் பின் ரொம்ப மரியாதையுடன் துளைகளை அடைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. தற்போது, திரு. சம்பத்குமார் தலைமையிலான அர்ப்பணிப்பு உணர்வு மிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் மேற்பார்வையில், துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிவடைய, இன்னும் 15 நாட்களுக்கு மேல் ஆகும். ஒவ்வொரு துளையும், ஒரு நாளைக்கு 10 அடி ஆழம் வரை அடைக்கப்படுகிறது. உயர் தொழில் நுட்பத்தில், சிமென்ட், கான்கிரீட் கலக்கப்பட்டு, கலவையை கம்ப்ரஷரில், அதிக வேகத்தில் துளைக்குள் செலுத்தி அடைக்கின்றனர்.இவ்வாறு, உயர் தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அடிப்பகுதியில் உள்ள துளைகள் மட்டுமின்றி, பக்கவாட்டிலும் உள்ள சிறு துளைகளும், அடைபட்டு விடுகின்றன. இத்தொழில் நுட்பத்தில் துளைகள் அடைக்கப்படும் போது, அணை முன்பை விட வலுவாகிவிடும். இதை கண்காணித்து வரும் கேரள அதிகாரிகள், தமிழக தொழில் நுட்ப மேம்பாடு குறித்து, வியப்பு தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், இது குறித்து எந்த புகாரும் சொல்ல முடியாது. தற்போது பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை, யாரும் குறை சொல்லவே முடியாது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெரியாறு அணையில் தமிழக வழக்கறிஞர்கள்: வழக்கு விசாரணைக்காக முல்லைப்பெரியாறு அணையை, தமிழக வழக்கறிஞர்கள் குழு பார்வையிட்டது.சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில், ஐவர் குழு ஆய்வுப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கான அறிக்கைகளை இக்குழு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டது. அறிக்கை நகல்கள் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தற்போது சுப்ரீம் கோர்டில், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சில தினங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு தேவையான தகவல்களை சேகரிக்க சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நவநீத கிருஷ்ணன், உமாபதி ஆகியோர் கொண்ட குழு நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றது. மெயின் அணை, பேபி அணை, ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்கும் பணிகளை பார்வையிட்டனர். மேலும், தற்போது வரை உள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், மதுரை தலைமை பொறியாளர் சம்பத்குமார், பெரியாறு அணை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜகோபால், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் உடன் இருந்தனர்..

01 June 2012

கும்பகோணத்தில் முகமூடி கொள்ளை.


கும்பகோணம் டாக்டர் ராமமூர்த்தி ரோடு 2 - வது தெரு செல்லம் நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதாம்பிகை. இவர் டாக்டருக்கு படித்துள்ளார். ஆனால் குடும்பத் தலைவியாக உள்ளார். நேற்று இரவு செந்தில் குமாரும் அவரது மனைவி லலிதாம்பிகையும் வீட்டில் ஏ.சி. அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் டாக்டர் செந்தில் குமாருக்கு கும்பகோணம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து போன் வந்தது. நோயாளி ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. உடனே புறப்பட்டு வாருங்கள் என போனில் பேசியவர்கள் தகவல் தெரிவித்தனர். செந்தில் குமாரும் தனது மனைவியிடம் தெரிவித்து விட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர். டாக்டர் செந்தில் குமார் வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து அக் கும்பல் உள்ளே நுழைந்தது. பெண் டாக்டர் லலிதாம்பிகை ஏ.சி. அறையில் படுத்து இருந்ததால் கொள்ளையர்கள் வெளிப்புற கதவை உடைக்கும் சத்தம் கேட்கவில்லை. உள்ளே புகுந்த அக்கும்பல் லலிதாம்பிகை படுத்திருந்த அறையின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்தது. திடீரென முகமூடி கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்தததை பார்த்ததும் டாக்டர் லலிதாம்பிகை அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட முயன்றார். அவரை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கத்தி முனையில் மிரட்டினர். சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்றனர். இதனால் லலிதாம்பிகை பயந்து போனார். உடனே கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் பணம், நகை எங்கு இருக்கிறது என மிரட்டி கேட்டனர். பீரோவில் ரூ. 3 லட்சம் பணம் இருப்பதாக லலிதாம்பிகை தெரிவித்தார். உடனே கொள்ளைக் கும்பல் அந்த பணத்தை எடுத்துக் கொண்டது. மேலும் கத்தி முனையில் லலிதாம்பிகை அணிந்திருந்த 5 பவுன் நகையையும் பறித்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் இந்த சம்பவம் குறித்து லலிதாம்பிகை தனது கணவர் செந்தில் குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் கிரி, டி. எஸ். பிக்கள் சிவபாஸ்கர், இளங்கோவன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடியது. கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் இது வரை முகமூடி கொள்ளை சம்பவம் நடைபெற்றதில்லை. தற்போது தான் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி-மாலைமலர்