RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

07 November 2011

இரண்டு பெண்களிடம்15 பவுன் நகை பறிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் சிவநேசன் மனைவி காந்திமதி (56). இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 5.45 மணிக்கு துர்க்காதேவி என்ற பெண்ணுடன் வாக்கிங் சென்றார். அவர் ரோட்டில் நடந்து சென்றபோது டூவீலரில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி காந்திமதி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் பட்டை தாலி செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள்.கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி நாகரெத்தினம் (49). மின்வாரியத்தில் கணக்குப்பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். நேற்றுமுன்தினம் காலை நாகரெத்தினம், அவரது தோழி ஜமீலாபீவியும் கொரநாட்டு கருப்பூரில் இருந்து சென்னை ரோட்டில் வாக்கிங் சென்றார். அவர்கள் கொரநாட்டு கருப்பூர் நத்தம் பிரிவு சாலை அருகே நடந்து வந்தபோது இரண்டு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கத்தியை காட்டி நாகரெத்தினம் அணிந்திருந்த 10 பவுன் நகையை அறுத்துச் சென்றனர்.
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010,03:30 IST
நன்றி தினமலர்

No comments: