பொங்கல் வாழ்த்துக்கள்..
பொங்கல் விழா,
தமிழக மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.
போகி
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ (அ) காப்புக்கட்டு பூலாப்பூ, வேப்பிலைக்கொத்து, ஆவாரம்பூக்கொத்து, இம்மூன்றும் சேர்ந்தக கட்டே பூலாப்பூ என்று ஒரே பெயரில் விற்கப்படுகிறது. பொங்கல் தினத்திற்க்கு முன்தினம், இதனை முன்வாயில் கூரையில் செருகி வைப்பர்.
No comments:
Post a Comment